Just In
- 19 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
350 கிமீ வேகத்தில் செல்லும் 'டிரைவர்லெஸ்' புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தும் சீனா!
ஓட்டுனர் இல்லாமல் செல்லும் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் டிரைவர்லெஸ் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.
புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் சீனா உலகின் முன்மாதிரி நாடாக விளங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய புல்லட் ரயில் பாதையை பெற்றிருக்கும் நாடு என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் அடுத்த கடத்திற்கு செல்கிறது சீனா.
ஆம். ஓட்டுனர் இல்லாமல் செல்லும் புல்லட் ரயிலை சீனா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஓட்டுனர் இயக்குவதைவிட மிக துல்லியமான நேரத்தில் இரு நகரங்களை இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்கள் சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சான்ஜியாகோ ரயில் நிலையங்களுக்கு இடையில் சேவைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் 2022ம் ஆண்டு சான்ஜியாகோ நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அதற்காக, அமைக்கப்படும் புதிய புல்லட் ரயில் வழித்தடத்தில்தான் இந்த தானியங்கி புல்லட் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
தலைநகர் பீஜிங்கிலிருந்து சான்ஜியாகோவுக்கு காரில் செல்வதற்கு 3.5 மணிநேரம் பிடிக்கும். ஆனால், இந்த புதிதாக அமைக்கப்படும் புல்லட் ரயில் தடம் மூலமாக 50 நிமிடங்களில் சென்றுவிடலாம். இதனால், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வரும் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் எளிதில் சென்றடையும் வாய்ப்பு கிட்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்களில் கண்காணிப்புக்காக ஓட்டுனர் ஒருவர் பணியில் இருப்பார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதுபோன்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், முழுமையாக ஓட்டுனர் இல்லாமல் செல்லும் விதத்தில் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு பீஜிங் - ஷென்யாங் ரயில் நிலையங்களுக்கு இடையில் வைத்து இந்த ஓட்டுனர் இல்லா புல்லட் ரயில்கள் 94 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதில், எந்த பிரச்னையும் இல்லாமல் துல்லியமாக சென்றதையடுத்து, விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சீன ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
உடல் சோர்வு, மனநிலை மற்றும் மாரடைப்பு போன்ற காரணங்களால் ஓட்டுனர்கள் ரயிலை இயக்கும்போது விபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது. மேலும், நேர மேலாண்மையிலும் பிரச்னை ஏற்படுகிறது. இவற்றை ஆட்டோமேட்டிக் டிரெயின் ஆபரேஷன் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக தவிர்க்க முடியும்.
அத்துடன், குறித்த நேரத்தில் ரயில்கள் மிக துல்லியமாக ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும். இந்த அதிவேக ரயில் சேவை சீனாவின் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதுடன், உலகின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Xinhua