Just In
- 24 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...!
ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டே கன்னத்தை தடவியதற்காக அபராதம் நோட்டீஸைப் பெற்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் போடவில்லை, பைக்கில் வந்தவர் சீட்பெல்ட் போடவில்லை என இவ்வாறு பல்வேறு விதமான வித்தியாசமான அபராதங்களை நாம் சந்தித்திருப்போம், கேட்டும் இருப்போம். ஆனால், இங்கு முதல் முறையாக கன்னத்தைத் தடவிக்கொண்டே (சொரிந்து) காரை ஓட்டிச் சென்றதற்காக, கார் உரிமையாளர் ஒருவருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியை பிபிசி ஆங்கில இணையதளம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில், வெளியிட்டிருந்த செய்தியை தற்போது தமிழில் இங்கு காண்போம்.
தெற்கு சீனாவைச் சேர்ந்தவர் ஜிலு லியூ. இவர் கடந்த திங்கள் கிழமை (மே 20) அன்று கிழக்கு ஷன்டோங் பகுதியில் உள்ள ஜினன் பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவர் கன்னத்தில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக, தடவிக் கொண்டே சொறிந்துள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்து சென்று பாதையில் இருந்த சிசிடிவி கேமிரா, இதுகுறித்த புகைப்படத்தை எடுத்து, லியூ போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, அபராதத்திற்கான ரசீதை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அந்த ரசீதில் அவர் கைப்பேசியை பயணத்தின்போது பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மறுத்த அவர், தான் தனது கன்னத்தை தடவியதாகவும், போன் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த காரணத்தை ஏற்க போக்குவரத்து போலீஸார், அவரிடம் அபராதமாக 50 யுவான்களைச் செலுத்த உத்தரவிட்டுள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ. 503 ஆகும்.
இதனால், மன உலைச்சல் அடைந்த லியூ, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படத்தையும், ரசீதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த பல்வேறு உயரதிகாரிகளை அணுகியும் பலனளிக்கவில்லை என மன வேதனையுடன் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன. இதன்காரணமாக, அந்த அபராதத் தொகையை நகர போக்குவரத்து போலீஸார் ரத்து செய்தனர். இதுகுறித்த தகவலை குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்டிருக்கின்றது.
மேலும், இதுகுறித்த அந்த நகர போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
"சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் செயற்கை நுன்னறிவைப் பெற்றி இயங்குகின்றன. இவை, ஓட்டுநர்களின் முறைகேட்டை அவர்களது செயலை வைத்து கண்டுபிடித்து, தானாக புகைப்படங்களை எடுக்கின்றன. அதனடிப்படையில்தான், அவர் கன்னத்தைத் தடவியதை செல்போன் பேசியதாக நினைத்து அபராதச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
ஒட்டுமொத்தமாக சீனாவில் தற்போது 170 மில்லியனுக்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை ஆட்டோ இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் 400க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்களைப் பொருத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!