Just In
- 36 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
2.09 கோடி ரூபாய் அபராதம்... அதிரடி காட்டும் கோவை போலீஸ்... எதற்காக தெரியுமா?
கோவை போலீசார் 2.09 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக தமிழக போலீசாரும் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிரான கோயமுத்தூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கோவை மாநகர போலீசார் நடப்பாண்டில் தற்போது வரை (டிசம்பர் 5ம் தேதி வரை), 2.09 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இந்த கால கட்டத்தில் கோவை மாநகரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தது தொடர்பாக 2,78,472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தது தொடர்பாக 33,818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இதே கால கட்டத்தில் கோவையில் இதுபோன்ற வழக்குகள் வெறும் 2.30 லட்சம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
அதிவேகத்தில் பயணம் செய்தது தொடர்பாக 7,570 வழக்குகளும், சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி சென்றது தொடர்பாக 31,755 வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 15,042 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக 3,453 வழக்குகளும், பஸ், ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றியது தொடர்பாக 1,193 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 2.09 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''46,966 டிரைவிங் லைசென்ஸ்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யும்படி பரிந்துரைத்துள்ளோம். தற்போதைய நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 29,824 டிரைவிங் லைசென்ஸ்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதன் விபரங்கள் பரிவாகன் வெப்சைட்டில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன'' என்றனர்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!