Just In
- 6 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி
கர்நாடக மற்றும் கேரள போலீஸார் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அன்பவர் என்ற 35 வயதான தொழிலதிபர் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கீழுள்ள அந்த வீடியோவில், கடத்தல்காரர்களால் இடம் மாற்றம் செய்யப்பட இருந்த பிணைய கைதியை போலீஸார் எவ்வாறு தடுப்புகளை வைத்து மீட்டுள்ளனர் என்பதை காணலாம்.
அன்வரை கடத்தி 16 மணிநேரத்தில் இந்த போலீஸார் கூட்டணி மீட்டுள்ளது. கேரள, மலப்புரத்தில் வசிக்கும் ஆசாத் அன்வர், காசராகோட் மாவட்டம் உடுமாவில் அமைந்துள்ள ஒரு லாட்ஜூக்கு வெளியே இருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.
கேரளா, கர்நாடகா என இரு மாநிலங்களின் போலீஸார் இணைந்து செயல்பட்டதால், நான்கு கடத்தல்காரர்களையும் அடையாளம் காண முடிந்துள்ளது. கரிப்பூரை சேர்ந்த உர நிறுவனம் நடத்தும் நாசர் என்பவருடன் ஆசாத் அன்வர் உதுமாக என்ற பகுதிக்கு சென்றதாகவும், நாசர், ஆசாத் அன்வரின் முதலாளி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உதுமாவில் அவர்கள் உரங்களுக்கான மூலப்பொருட்களாக முடித்திருத்தும் கடைகளில் இருந்து முடி சேகரிப்பது வழக்கம். இருவரும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இவர்களிடம் பணம் இருப்பதை அந்த லாட்ஜில் பணியாற்றும் ஒரு உதவியாளர் தான் கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளார்.
கடத்தல்காரர்கள் வருவதற்குள் நாசர் எப்படியோ தப்பித்துள்ளார். ஆனால் ஆசாத் அன்வர் சிக்கி கொண்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் பணம் இல்லை என்பது கடத்தல்காரர்களுக்கு தெரியவர, அன்வரை விடுவிக்க ரூ.2 லட்சத்தை கேட்டு அவரது மனைவியை தொலைப்பேசி வாயிலாக மிரட்டியுள்ளனர்.
அன்வரின் மனைவி காசர்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிய போலீஸார் அவர்களது செல்போனை போலீஸார் கண்காணித்தனர். லாட்ஜ் இருக்கும் பகுதியை உள்ளூர்வாசிகள் சிலர் கடத்தல்காரர்களை பார்த்ததாக அங்கிருந்துவரும் தகவல் கூறுகின்றன.
இவற்றையும் சேர்த்து வழக்கு பதிவு செய்த போலீஸார், கடத்தல்காரர்கள் கர்நாடக மாநிலம், மங்களூரில் இருப்பதை செல்போனை கண்காணித்ததில் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து காசர்கோடு போலீஸார், மங்களூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மங்களூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பயணித்து கொண்டு இருப்பதை தெரிந்துக்கொண்டனர். சரியாக அவர்கள் வரும் சாலையில் வெவ்வேறான பகுதிகளில் தடுப்புகளை அமைத்து கடத்தல்காரர்களின் காரை மடக்கியுள்ளனர்.
இருப்பினும் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் என்பதால் கடத்தல்காரர்கள் எந்தவொரு சிரமுமின்றி சில தடுப்புகளை தட்டிவிட்டு அதில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர். இதனால் போலீஸார் வாகனங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி பெரிய அளவிலான தடுப்புகளை அமைத்தனர்.
லாரி ஒன்றை சாலையின் குறுக்கே போலீஸார் நிறுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இருப்பினும் கடத்தல்காரர்கள் யு-டர்னில் திரும்ப முயன்ற போது போலீஸார் ஒருவர் காரின் பின்கதவை திறந்து அன்வரை விடுத்துவிடுகிறார்.
க்ரெட்டாவில் கடத்தல்காரர்கள் அங்கிருந்து பறந்து விடுகின்றனர். காரில் இருந்த நான்கு பேரையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் இவர்கள் நால்வர் மட்டுமின்றி மேலும் சிலரும் இருப்பர் என போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350