Just In
- 20 min ago குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- 1 hr ago இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
- 3 hrs ago திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- 4 hrs ago 73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
Don't Miss!
- Movies சிம்புவின் 50ஆவது படம்.. தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே
- News மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்! "நீங்கள் ஒன்றும் அப்பாவி இல்லை!" ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! பரபர
- Lifestyle கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
போலீஸாரின் ப்ளான் வீண், க்ரெட்டாவில் பறந்த கடத்தல்காரர்கள்!! படத்தை மிஞ்சிய காட்சி
கர்நாடக மற்றும் கேரள போலீஸார் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அன்பவர் என்ற 35 வயதான தொழிலதிபர் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கீழுள்ள அந்த வீடியோவில், கடத்தல்காரர்களால் இடம் மாற்றம் செய்யப்பட இருந்த பிணைய கைதியை போலீஸார் எவ்வாறு தடுப்புகளை வைத்து மீட்டுள்ளனர் என்பதை காணலாம்.
அன்வரை கடத்தி 16 மணிநேரத்தில் இந்த போலீஸார் கூட்டணி மீட்டுள்ளது. கேரள, மலப்புரத்தில் வசிக்கும் ஆசாத் அன்வர், காசராகோட் மாவட்டம் உடுமாவில் அமைந்துள்ள ஒரு லாட்ஜூக்கு வெளியே இருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.
கேரளா, கர்நாடகா என இரு மாநிலங்களின் போலீஸார் இணைந்து செயல்பட்டதால், நான்கு கடத்தல்காரர்களையும் அடையாளம் காண முடிந்துள்ளது. கரிப்பூரை சேர்ந்த உர நிறுவனம் நடத்தும் நாசர் என்பவருடன் ஆசாத் அன்வர் உதுமாக என்ற பகுதிக்கு சென்றதாகவும், நாசர், ஆசாத் அன்வரின் முதலாளி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உதுமாவில் அவர்கள் உரங்களுக்கான மூலப்பொருட்களாக முடித்திருத்தும் கடைகளில் இருந்து முடி சேகரிப்பது வழக்கம். இருவரும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இவர்களிடம் பணம் இருப்பதை அந்த லாட்ஜில் பணியாற்றும் ஒரு உதவியாளர் தான் கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளார்.
கடத்தல்காரர்கள் வருவதற்குள் நாசர் எப்படியோ தப்பித்துள்ளார். ஆனால் ஆசாத் அன்வர் சிக்கி கொண்டுள்ளார். இவர்கள் இருவரிடமும் பணம் இல்லை என்பது கடத்தல்காரர்களுக்கு தெரியவர, அன்வரை விடுவிக்க ரூ.2 லட்சத்தை கேட்டு அவரது மனைவியை தொலைப்பேசி வாயிலாக மிரட்டியுள்ளனர்.
அன்வரின் மனைவி காசர்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிய போலீஸார் அவர்களது செல்போனை போலீஸார் கண்காணித்தனர். லாட்ஜ் இருக்கும் பகுதியை உள்ளூர்வாசிகள் சிலர் கடத்தல்காரர்களை பார்த்ததாக அங்கிருந்துவரும் தகவல் கூறுகின்றன.
இவற்றையும் சேர்த்து வழக்கு பதிவு செய்த போலீஸார், கடத்தல்காரர்கள் கர்நாடக மாநிலம், மங்களூரில் இருப்பதை செல்போனை கண்காணித்ததில் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து காசர்கோடு போலீஸார், மங்களூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மங்களூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் பயணித்து கொண்டு இருப்பதை தெரிந்துக்கொண்டனர். சரியாக அவர்கள் வரும் சாலையில் வெவ்வேறான பகுதிகளில் தடுப்புகளை அமைத்து கடத்தல்காரர்களின் காரை மடக்கியுள்ளனர்.
இருப்பினும் புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் என்பதால் கடத்தல்காரர்கள் எந்தவொரு சிரமுமின்றி சில தடுப்புகளை தட்டிவிட்டு அதில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர். இதனால் போலீஸார் வாகனங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி பெரிய அளவிலான தடுப்புகளை அமைத்தனர்.
லாரி ஒன்றை சாலையின் குறுக்கே போலீஸார் நிறுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இருப்பினும் கடத்தல்காரர்கள் யு-டர்னில் திரும்ப முயன்ற போது போலீஸார் ஒருவர் காரின் பின்கதவை திறந்து அன்வரை விடுத்துவிடுகிறார்.
க்ரெட்டாவில் கடத்தல்காரர்கள் அங்கிருந்து பறந்து விடுகின்றனர். காரில் இருந்த நான்கு பேரையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் இவர்கள் நால்வர் மட்டுமின்றி மேலும் சிலரும் இருப்பர் என போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.
-
மிக மிக காஸ்ட்லியான காரை வாங்கிய யுட்யூபர்! சீக்கிரமே வேலைய விட்டுட்டு யுட்யூப் சேனல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்
-
இலவசம்னா நம்மா ஆளுங்க குவிஞ்சிருவாங்களே! 5 வருட வாரண்டி, 1 ஆண்டுக்கான சாலையோர உதவியும் இலவசம்..
-
ரூ36 ஆயிரத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இந்த வாரம் நீங்க தவற விட்டது இதை தான்!