Just In
- 23 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காரில் தனியாக செல்லும்போது இதை செய்ய தவறினால் நடவடிக்கை... போலீஸ் அதிரடி... என்னனு தெரியுமா?
காரில் தனியாக செல்லும்போதும் இதை கட்டாயமாக செய்ய வேண்டும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், அதனுடனே சேர்ந்து வாழ பழகி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தற்போது தங்களின் அன்றாட பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.
முக கவசம் அணிவதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஓரளவிற்கு குறைக்க முடியும். எனவே முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் என எதில் பயணம் செய்தாலும், முக கவசங்களை அணிவது அவசியம்.
ஆனால் கார் உரிமையாளர்கள் ஒரு சிலர் முக கவசங்களை அணிவதை தவிர்க்கின்றனர். குறிப்பாக காரில் தனியாக பயணம் செய்யும்போது அவர்கள் முக கவசம் அணிவதில்லை. காவல் துறையினர் கேட்டால், தனியாக காரில் செல்லும்போது முக கவசம் எதற்கு? என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இது பாதுகாப்பானது இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எனவே இதுபோன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி காவல் துறையினர் விதிமுறைகளை தற்போது மேம்படுத்தியுள்ளனர். இதன்படி கார்களில் தனியாக பயணிக்கும்போது முக கவசம் அணியாமல் இருந்தாலும், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனா பரவலை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த காவல் துறையினர் இதனை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கார் ஓட்டுனர்கள் அவ்வப்போது விண்டோ கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டு, சாலையில் மற்றவர்களுடன் உரையாடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக வழி கேட்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மற்றவர்கள் உடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதனை மனதில் வைத்துதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளையும் காவல் துறையினர் புதுப்பித்துள்ளனர். இதன்படி தலை கவசம் அணிந்திருந்தாலும், அதற்கு கீழாக முக கவசத்தையும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அணிவது கட்டாயம்.
அதாவது இரு சக்கர வாகனத்தை ஓட்டும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்து அதன்பின் தலை கவசம் அணிய வேண்டும். இதுகுறித்து கார்அண்ட்பைக் செய்தி வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தலை கவசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை தடுக்க முக கவசம் அவசியமாகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மீறும்பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும். அத்துடன் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் ஒரு சிலர் கைக்குட்டைகள் முகத்தில் கட்டி கொண்டு, முக கவசம் போல் பயன்படுத்துகின்றனர்.
இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முறையான முக கவசங்களை அணிவதுதான் பாதுகாப்பை தரும். எனவே கைக்குட்டைகளை கட்டியிருந்தால், காவல் துறையினர் அதனை முறையான பாதுகாப்பாக கருத மாட்டார்கள். எனவே அபராதம் விதிக்கப்படும்.
Note: Images used are for representational purpose only.