Just In
- 12 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 38 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜயபாஸ்கர் அரணாய் காக்கும் நிலையில் தமிழகத்திற்கு ஷாக் கொடுக்கும் கேரளா... அதிர வைக்கும் சம்பவம்...
கொரோனா வைரஸிடம் இருந்து தமிழகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் அரணாய் காத்து வரும் நிலையில், அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது வரை 18,944 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,25,323 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சீனா, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முடக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 24) இரவு அறிவித்தார். இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டால்தான், கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
எனவே அரசாங்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தவிர தமிழக அரசும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிகாரிகள் முழு வீச்சில் இயங்கி வருவதால், சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் உள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 23 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலையை அளிக்க கூடிய எண்ணிக்கைதான் என்றாலும், ஒரு சில மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. குறிப்பாக நாட்டிலேயே கேரளாதான் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை 109 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைகளில் தமிழக அரசு சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கேரளாவில் இருந்து மக்கள் சிலர் ஆம்புலன்ஸ்கள் மூலம் முறைகேடாக கோவைக்கு வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் நாட்டிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள மாவட்டம் என்பதால், கோவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ''கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொறுப்பற்ற ஒரு சிலரின் நடவடிக்கைகள் எங்களின் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக இருப்பது வேதனையளிக்கிறது'' என்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் தமிழகத்திற்கு வந்தது வாளையார் சோதனை சாவடியில், சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது. பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் தற்போது முடங்கியுள்ளன. சொந்த வாகனங்களில் பயணம் செய்யவும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு, குறிப்பாக கோவை வருவதற்கு, மக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர். அதுவும் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக சைரன் போட்டு கொண்டு வருகின்றனர் என்பது கவலையை ஏற்படுத்துகிறது. சந்தேகம் ஏற்பட்டதால், வாளையார் சோதனை சாவடியில், சைரனுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்றை அதிகாரிகள் சமீபத்தில் நிறுத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்தியதில், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே ஆம்புலன்ஸ்கள் மூலம் சட்டவிரோதமாக பயணம் செய்வது தண்டனைக்கு உரியது என அதிகாரிகள் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பலர் முறையாக கடைபிடித்து வருகின்றனர். எனவே சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொண்டு வாகன ஓட்டிகள் சிலர் ஜாலியாக சுற்றுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையை அளிக்கின்றன. இதனால் சரியான காரணம் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
இதன்படி வீடுகளை விட்டு வெளியில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்கள் வந்ததற்கான காரணத்தை போலீசார் கேட்கின்றனர். இதற்கு சரியான காரணத்தை கூறாவிட்டால், ஸ்பாட்டிலேயே வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். நிலைமையின் தீவிரத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர வேண்டும்.
தேவையில்லாமல் வாகனங்களில் இனி வெளியே வர வேண்டாம். அரசின் எச்சரிக்கையை மீறி வெளியே வந்தால், பாதிக்கப்படப்போவது நீங்கள் மட்டுமல்ல. உங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படலாம். எனவே அரசாங்கத்திற்கும், இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நமக்காக உழைக்கும் அதிகாரிகள், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது நமது கடமை.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!