Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...
கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், முதியவர் ஒருவர் செய்துள்ள காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே அத்தியாவசிய தேவை இருப்பவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும். ஊரடங்கு உத்தரவு காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர் இதை பயன்படுத்தி கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஜாலியாக வலம் வந்துள்ளார். அத்துடன் தன்னுடைய உறவுக்கார சிறுவன் ஒருவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கோயன் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நபர்தான் ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறார். அத்துடன் அவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
அந்த சிறுவன் ஸ்கூட்டரின் பின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சாலைகள் இப்படி வெறிச்சோடி போய் இருப்பதை இதற்கு முன் பார்த்ததில்லை என அந்த நபர் வீடியோவில் கூறியுள்ளார். மேலும் டூவீலர் ஓட்டுவதற்கு மிகவும் நன்றாக இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். மேலும் சாலை வெறிச்சோடி போய் இருப்பதையும் அவர் வீடியோவில் காட்டுகிறார்.
இதில், சாலையில் காவல் துறையினர் அமர்ந்திருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இதன் உச்சகட்டமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், இதுபோன்று வெறிச்சோடி போய் இருக்கும் சாலைகளை என்ஜாய் செய்ய வேண்டும் எனவும் அந்த நபர் கூறுகிறார். சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 27,370 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 5,97,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் தற்போது அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனிமைப்படுத்தி கொள்வது ஒன்றே தீர்வாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனவேதான் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினாலும் கூட, ஒரு சில வாகன ஓட்டிகள் ஜாலியாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்போது அத்தியாவசிய தேவைகள் அல்லாமல், ஜாலியாக சுற்றுவதற்காக வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் போலீசாரின் 'கவனிப்பு' வேறு மாதிரியாக உள்ளது. மக்களை வீடுகளில் இருக்க வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தேவையில்லாமல் வீடியோ விட்டு அந்த மும்பை நபர் சிக்கலில் சிக்கியுள்ளார். ஆம், அந்த வாகன ஓட்டியை போலீசார் பிடித்துள்ளனர்.
தனது செயலுக்காக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகளை அவர் மதிப்பதாகவும், தான் செய்த செயல் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதுபோன்று ஒரு சிலர் அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற நபர்களால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அவர்களின் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் சேர்த்தே பாதிப்பு ஏற்படுகிறது. இதனை அவர்கள் உணர்வதில்லை.
தற்போது சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், ஜாலி ரைடு சென்று விட்டு வரலாம் என வாகன ஓட்டிகள் சிலர் நினைக்கின்றனர். கொரோனா வைரஸின் தீவிரத்தையும், நிலைமை விபரீதமாகி கொண்டிருப்பதையும் அவர்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் தேவையில்லாமல் வெளியே சென்றால், போலீசார் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?