Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...
கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், முதியவர் ஒருவர் செய்துள்ள காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே அத்தியாவசிய தேவை இருப்பவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும். ஊரடங்கு உத்தரவு காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர் இதை பயன்படுத்தி கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஜாலியாக வலம் வந்துள்ளார். அத்துடன் தன்னுடைய உறவுக்கார சிறுவன் ஒருவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கோயன் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நபர்தான் ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறார். அத்துடன் அவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
அந்த சிறுவன் ஸ்கூட்டரின் பின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சாலைகள் இப்படி வெறிச்சோடி போய் இருப்பதை இதற்கு முன் பார்த்ததில்லை என அந்த நபர் வீடியோவில் கூறியுள்ளார். மேலும் டூவீலர் ஓட்டுவதற்கு மிகவும் நன்றாக இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். மேலும் சாலை வெறிச்சோடி போய் இருப்பதையும் அவர் வீடியோவில் காட்டுகிறார்.
இதில், சாலையில் காவல் துறையினர் அமர்ந்திருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இதன் உச்சகட்டமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், இதுபோன்று வெறிச்சோடி போய் இருக்கும் சாலைகளை என்ஜாய் செய்ய வேண்டும் எனவும் அந்த நபர் கூறுகிறார். சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 27,370 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 5,97,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் தற்போது அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனிமைப்படுத்தி கொள்வது ஒன்றே தீர்வாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனவேதான் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினாலும் கூட, ஒரு சில வாகன ஓட்டிகள் ஜாலியாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்போது அத்தியாவசிய தேவைகள் அல்லாமல், ஜாலியாக சுற்றுவதற்காக வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் போலீசாரின் 'கவனிப்பு' வேறு மாதிரியாக உள்ளது. மக்களை வீடுகளில் இருக்க வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தேவையில்லாமல் வீடியோ விட்டு அந்த மும்பை நபர் சிக்கலில் சிக்கியுள்ளார். ஆம், அந்த வாகன ஓட்டியை போலீசார் பிடித்துள்ளனர்.
தனது செயலுக்காக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகளை அவர் மதிப்பதாகவும், தான் செய்த செயல் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இதுபோன்று ஒரு சிலர் அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற நபர்களால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அவர்களின் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் சேர்த்தே பாதிப்பு ஏற்படுகிறது. இதனை அவர்கள் உணர்வதில்லை.
தற்போது சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், ஜாலி ரைடு சென்று விட்டு வரலாம் என வாகன ஓட்டிகள் சிலர் நினைக்கின்றனர். கொரோனா வைரஸின் தீவிரத்தையும், நிலைமை விபரீதமாகி கொண்டிருப்பதையும் அவர்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் தேவையில்லாமல் வெளியே சென்றால், போலீசார் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!