Just In
- 19 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 36 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 55 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கடவுள் சார் நீங்க... மிக மிக மலிவான விலையில் உயிர் காக்கும் கருவி... உலகையே அசத்தும் நம்ம மஹிந்திரா
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மிக மிக மலிவான விலையில் உயிர் காக்கும் கருவியை இந்தியாவின் மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் தற்போது வரை 21,353 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4,74,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள்தான் கோவிட்-19 வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் உலகம் முழுவதும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. கோவிட்-19 வைரஸ் காரணமாக, வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. இதனாலும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும் பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய முன்வந்துள்ளன. இதன்படி கனடாவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அரசு உதவும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதேபோல் ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன.
இதற்கான அனுமதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில்தான் வழங்கினார். இந்தியாவை பொறுத்தவரை, மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இதன்படி மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் உடனடியாக வென்டிலேட்டர்களின் உற்பத்தியை துவங்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கோவிட்-19 வைரஸின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக தனது 100 சதவீத சம்பளத்தை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த சூழலில், மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதில் தற்போது புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தற்போது 2 பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏற்கனவே உயர் ரக வென்டிலேட்டர்களை தயாரித்து வருகின்றன.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா இந்த தகவலை கூறியுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு வெளியிட்ட ஒரு சில நாட்களில் மேற்கண்ட தகவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால உயிர்காக்கும் கருவி 7,500 ரூபாய் என்ற விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் அதிநவீன இயந்திரங்களின் விலை 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வென்டிலேட்டரின் புரோட்டோடைப் இன்னும் மூன்று நாட்களில் அனுமதிக்காக தயார் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளே திணறுவதை நாம் காண முடிகிறது.
அப்படி இருக்கையில் இந்தியாவில் நிலைமை விபரீதமானால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படும். அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களின் தேவையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் உதவி செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதனிடையே இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு 2 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக அறிவித்துள்ளது. இந்த நிதியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!