Just In
- 1 hr ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 2 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 4 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 9 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- News தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவியை தொடர்ந்து, டாடா குழுமம் அடுத்த ஒரு நல்ல காரியத்தை செய்யவுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. இதில், சீனா மட்டுமே பாதிப்புகளில் இருந்து ஓரளவு மீண்டு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எஞ்சிய நாடுகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. மேற்கண்ட நாடுகளை தவிர, உலகம் முழுவதும் இன்னும் பல்வேறு நாடுகளும் கோவிட்-19 வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸை எதிர்த்து மனித இனமே ஒன்று திரண்டு போரிட்டு வருகிறது. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது.
கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளன. வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படும் தற்போதைய சூழலில், அவற்றை தயாரித்து வழங்குவதற்கு, உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன.
டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா என பல நிறுவனங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு நன்கொடைகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை டாடா குழுமம் சார்பில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ட்ரஸ்ட் சார்பில் ரூ.500 கோடி மற்றும் டாடா சன்ஸ் சார்பில் ரூ.1,000 கோடி என டாடா குழுமம் சார்பில் ஒட்டுமொத்தமாக 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. எனவே டாடா குழுமத்திற்கும், ரத்தன் டாடாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த சூழலில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் டாடா குழுமம் மருத்துவமனை ஒன்றை அமைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதில், கேரளாவும் ஒன்று. இந்த சூழலில்தான், அங்கு மருத்துவமனையை அமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ள வசதியாக சிறப்பு மருத்துவமனையை, காசர்கோடு மாவட்டத்தில் டாடா குழுமம் அமைக்கவுள்ளது. செம்மநாடு பஞ்சாயத்தில் உள்ள தெக்கில் என்ற கிராமத்தில், இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இன்ஜினியர்கள் உள்பட நிபுணர்கள் குழுவினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனையில் 450 பேரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இருக்கும் என தெரிகிறது. மேலும் 540 படுக்கை மற்றும் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த சிறப்பு மருத்துவமனை தயாராகிறது.
அடுத்த சில மாதங்களில் இந்த மருத்துவமனை தயாராகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூடிய விரைவிலேயே எதிர்பார்க்கலாம். டாடா குழுமத்தின் இந்த முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகதான் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியாவிற்கு டாடா குழுமம் செய்து வரும் தொடர்ச்சியான நல்ல காரியங்கள், நாட்டு மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளன. இதனால் இனி டாடா தயாரிப்புகளைதான் வாங்குவோம் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருவதை பரவலாக காண முடிகிறது.
Note: Images used are for representational purpose only.