Just In
- 50 min ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 2 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 3 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 5 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News புதுக்கோட்டையில் ஞானசேகரன் வீட்டில் ஒரே அதிசயம்.. எல்லாரும் திரண்டு வந்துட்டாங்க.. ஆச்சரிய "குழந்தை"
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
கோவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் கையை மீறி சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கங்கள் அதனை தடுக்க பல கட்ட பாதுகாப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் கடுமையான கெடுப்பிடிகள் கடந்த சில வாரங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி உயர்நிதிமன்றம், மாநிலத்தில் வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் முக கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனை ஏற்காதவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. காரில் தனியாக பயணம் செய்தாலும் முக கவசம் கட்டாயம். கார் பொது சாலைக்கு வந்துவிட்டால் அதுவும் பொது இடத்தை போன்றதே ஆகும்.
இதனால் வெளியே மற்றவர்கள் முக கவசம் அணிவதை போல் கார்களுக்கு உள்ளே இருப்பவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இதை தான் உயர்நீதி மன்றம் சொல்கிறது.
இதை பலர் மதித்து ஏற்று கொண்டாலும், எப்போதும்போல் சிலர் அதை ஏற்பதாக இல்லை. அவ்வாறு முக கவசம் அணியாமல் டெல்லியில் சாலையில் பயணித்த தம்பதியினரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
Image Courtesy: ANI News
இதுகுறித்து ஏஎன்ஐ (ANI) ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். ஒரு தம்பதியினரின் கார் போலீஸாரால் நிறுத்தப்படுகிறது. சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் முக கவசம் அணியவில்லை.
அதுமட்டுமின்றி ஏன் முக கவசம் அணியவில்லை என கேட்ட போலீஸாரிடம் தரக்குறைவாக நடக்க பார்க்கின்றனர். குறிப்பாக அந்த பெண், அவர் எனது கணவர், நான் விரும்பினால் அவரை முத்தமிடுவேன்.
நான் யுபிஎஸ்சி-யில் தேர்வு தேர்ச்சி பெற்றவள், நான் ஏன் முக கவசம் அணிய வேண்டும் என மிகவும் கீழ் தரமாக பேசுகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம் ஊரடங்கு காலத்தில் காரில் செல்வதற்கான பாஸ் கூட இல்லை.
டெல்லியில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது முக்கிய பணிகளுக்காக வெளியே வர வேண்டி இருப்போர் கட்டாயம் பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. நீண்ட நேர வாக்குவதத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் காருடன் தர்யகாஞ்ச் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கருப்பு சட்டை அணிந்திருக்கும் அந்த ஆண் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதானவரின் பெயர் பங்கஞ், அவரது மனைவியின் பெயர் அபா. போலீஸார் விசாரித்தத்தில் இவர் இருவருமே பட்டேல் நகரை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை நடந்துள்ளது.