Just In
- 5 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 1 hr ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 2 hrs ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?
வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க, வெறும் 220 ரூபாய் செலவில், சூப்பரான ஐடியா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கார், டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையாக விதிக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாடுகளை மீறி, இந்தியா முழுவதும் தேவையே இல்லாமல் இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது விமானங்களும் பறக்க தொடங்கியுள்ளன. இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயணிகள் ரயில் சேவையும் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது. இதுதவிர ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கார், டூவீலர் போன்ற சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம்தான் இதற்கு காரணம்.
எனவே ஆட்டோ, டாக்ஸி, கேப்கள் மீண்டும் இயக்கப்பட்டாலும் கூட, பயணிகள் வருகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பயணிகள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்குவதற்காக, கொல்கத்தா நகரை சேர்ந்த கேப், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் புதிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் பிளாஸ்டிக் ஸ்க்ரீன் ஒன்றை பொருத்தி வருகின்றனர்.
வாகனத்தில் டிரைவர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு இடையே இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்பதுடன், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். காவல் துறையும் இந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆப் சார்ந்து செயல்படும் கேப்கள், டாக்ஸிகள், ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்களுடனான கூட்டத்தை காவல் துறை நடத்தியுள்ளது. இதில், பிளாஸ்டிக் ஸ்க்ரீனின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. டாக்ஸி யூனியன் தலைவர்களும் இதனை ஏற்று கொண்டு, அனைத்து வாகனங்களிலும் பிளாஸ்டிக் ஸ்க்ரீனை பொருத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்து வாகனங்களில் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் பலன் அளிக்கும் என்று நம்புகிறோம். பாலித்தீன் மூலமாக மிகவும் குறைவான விலையில் H-வடிவ பேரியர்களை நாங்கள் உருவாக்கினோம்.
காரியா பகுதியில் உள்ள சில டெய்லர்கள் முதல் செட்டை எங்களுக்கு உருவாக்கி தந்தனர். அதனை நாங்கள் கேப் டிரைவர்களுக்கு வினியோகம் செய்தோம். தற்போது மற்ற டாக்ஸி டிரைவர்களும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீனை வாங்க தொடங்கி விட்டனர்'' என்றனர். இந்த பேரியரின் விலை 220 ரூபாய் மட்டுமே என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''கோ-டிரைவர் இருக்கையில் அமர பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பின் இருக்கையில் 2 பேர் அமர்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்'' என்றனர். கொல்கத்தா நகரில் ஆட்டோ ரிக்ஸாக்களிலும் தற்போது இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் பொருத்தப்படுகின்றன.
மேற்கு வங்கம் மட்டுமல்லாது, தமிழகத்திலும் ஏராளமான வாகனங்களில் இத்தகைய பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் உடன் வாடகை கார்கள் வலம் வர தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!