Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?
வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க, வெறும் 220 ரூபாய் செலவில், சூப்பரான ஐடியா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கார், டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையாக விதிக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாடுகளை மீறி, இந்தியா முழுவதும் தேவையே இல்லாமல் இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது விமானங்களும் பறக்க தொடங்கியுள்ளன. இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயணிகள் ரயில் சேவையும் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது. இதுதவிர ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கார், டூவீலர் போன்ற சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம்தான் இதற்கு காரணம்.
எனவே ஆட்டோ, டாக்ஸி, கேப்கள் மீண்டும் இயக்கப்பட்டாலும் கூட, பயணிகள் வருகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் பயணிகள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்குவதற்காக, கொல்கத்தா நகரை சேர்ந்த கேப், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் புதிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் பிளாஸ்டிக் ஸ்க்ரீன் ஒன்றை பொருத்தி வருகின்றனர்.
வாகனத்தில் டிரைவர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு இடையே இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்பதுடன், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். காவல் துறையும் இந்த முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆப் சார்ந்து செயல்படும் கேப்கள், டாக்ஸிகள், ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்களுடனான கூட்டத்தை காவல் துறை நடத்தியுள்ளது. இதில், பிளாஸ்டிக் ஸ்க்ரீனின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. டாக்ஸி யூனியன் தலைவர்களும் இதனை ஏற்று கொண்டு, அனைத்து வாகனங்களிலும் பிளாஸ்டிக் ஸ்க்ரீனை பொருத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்து வாகனங்களில் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் பலன் அளிக்கும் என்று நம்புகிறோம். பாலித்தீன் மூலமாக மிகவும் குறைவான விலையில் H-வடிவ பேரியர்களை நாங்கள் உருவாக்கினோம்.
காரியா பகுதியில் உள்ள சில டெய்லர்கள் முதல் செட்டை எங்களுக்கு உருவாக்கி தந்தனர். அதனை நாங்கள் கேப் டிரைவர்களுக்கு வினியோகம் செய்தோம். தற்போது மற்ற டாக்ஸி டிரைவர்களும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீனை வாங்க தொடங்கி விட்டனர்'' என்றனர். இந்த பேரியரின் விலை 220 ரூபாய் மட்டுமே என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''கோ-டிரைவர் இருக்கையில் அமர பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பின் இருக்கையில் 2 பேர் அமர்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்'' என்றனர். கொல்கத்தா நகரில் ஆட்டோ ரிக்ஸாக்களிலும் தற்போது இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் பொருத்தப்படுகின்றன.
மேற்கு வங்கம் மட்டுமல்லாது, தமிழகத்திலும் ஏராளமான வாகனங்களில் இத்தகைய பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், பிளாஸ்டிக் ஸ்க்ரீன்கள் உடன் வாடகை கார்கள் வலம் வர தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!