Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அமெரிக்கா ஆட்டம் கண்டதால் ஆத்திரம்... அடுத்த 100 நாளில் இது நடக்கும்... டிரம்ப் கட்டளை நிறைவேறுகிறது
கொரோனா வைரஸால் அமெரிக்க ஆட்டம் கண்டுள்ள நிலையில், டொனால்டு டிரம்ப்பின் கட்டளையை நிறைவேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19, சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படுகிறது. மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் தற்போது வரை 37,846 பேரின் உயிரை பறித்துள்ளது.
அதே சமயம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 7,87,438 பேரை கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் வரும் நாட்களில் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்குகிறது.
இதனால் உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளின் அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன. வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அரசுகளின் வேண்டுகோளை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏற்று கொண்டுள்ளன.
உலக வல்லரசான அமெரிக்காவே கொரோனா வைரஸால் தற்போது நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி, ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டு கொண்டுள்ளார்.
ஆனால் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும் விஷயத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் கால தாமதம் செய்து வருவதாக டொனால்டு டிரம்ப் முதலில் ஆத்திரமாக குற்றம் சாட்டினார். இதனால் வென்டிலேட்டர்களை தயாரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் புகைப்படம் எடுத்து வெளியிட்டது.
எனவே ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டினார். டொனால்டு டிரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளையடுத்து, வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதன்படி ஜிஇ (GE) நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த 100 நாட்களில், 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் இதனை நேற்று (மார்ச் 30) அறிவித்தது. ஜென்ரல் எலெக்ட்ரிக்கின் (General Electric) ஹெல்த்கேர் யூனிட் உடன் கூட்டாக இணைந்து, மிக்சிகனில் உள்ள தொழிற்சாலையில், அடுத்த 100 நாட்களில், 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்பின் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு மாதத்திற்கு 30,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் தற்போதே அமெரிக்கா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வரும் நாட்களில் பாதிப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் இதர நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்கள் நியூயார்க் உள்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகள் மிகுந்த பாதுகாப்புடன்தான் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்துதான் பணியாற்றுவார்கள். இது தவிர கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா? என ஆலைக்குள் நுழையும் முன்பு, அவர்களுக்கு சோதனையும் செய்யப்படும். இந்தியாவை பொறுத்தவரை, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!