ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

தமிழ்நாடு காவல் துறை தரமான சம்பவத்தை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிரா, டெல்லி,குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகமும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளது. ஊரடங்கிற்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய முதற்கட்ட ஊரடங்கு, பின் மே 3, மே 17 என நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்தாலும் கூட, படிப்படியாக சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சாலையில் தற்போது அதிக அளவிலான வாகனங்களை காண முடிகிறது. இயல்பு நிலை திரும்பி விட்டதோ? என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு, சாலையில் வாகனங்கள் சகஜமாக வலம் வந்து கொண்டுள்ளன.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டு விட்டன. அத்துடன் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதுதவிர தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை தேவையில்லாமல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இந்த தடையை மீறி தேவை இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், தற்போது நாட்டில் வாகன போக்குவரத்து சீராகி வருகிறது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஒரு சில மாநிலங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு விட்டன. அத்துடன் விமான சேவையும் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது புலம்பெயரும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இதுதவிர நாட்டின் ஒரு சில பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை மீண்டும் இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் மற்றும் கடைகளும் திறக்கப்பட்டு வருவதால், தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் தற்போது அதிகளவில் சாலைக்கு வர தொடங்கியுள்ளன.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஆனால் இன்னமும் ஊரடங்கு அமலில் உள்ளது என்பதை மறந்து, ஒரு சிலர் வாகனங்களில் தேவையில்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது தமிழக காவல் துறை முன்பு போலவே கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தற்போது வரை 5,26,507 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

ஆனால் அவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேர அளவில் பார்த்தால், தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 4,543 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களையும் தமிழக காவல் துறை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறது.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

இதன்படி தமிழகத்தில் தற்போது வரை ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேர அளவில் பார்த்தால், தமிழகத்தில் 2,351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக தற்போது வரையில் 4,94,770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

தற்போது வரை சுமார் 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர அளவில் பார்த்தால், 4,369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 21,45,300 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ள சூழலில், அவற்றை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் பணிகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.

ஸ்கெட்ச் போட்டு தூக்கீட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

வாகனத்தை திரும்ப பெற அதன் உரிமையாளர்கள் செல்லும்போது, எப்ஐஆர் நகல், டிரைவிங் லைசென்ஸ் அசல் மற்றும் நகல், ஆர்சி புத்தகத்தின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், போலீசாரின் நடவடிக்கை தொடர்வதால், தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: 4 Lakh Vehicles Of Violators Seized In Tamil Nadu. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X