கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

கோவையில் திருடப்பட்ட பைக் ஒன்று பார்சல் மூலமாக அதன் உரிமையாளருக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வருவதுடன், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கிட்டத்தட்ட அனைத்து விதமாக தொழில்களும் நலிவடைந்துள்ளன.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனவே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வரும் நாட்களில் தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், இன்னும் பலர் வேலையிழக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் பொது போக்குவரத்து சீராக இல்லாததால், அவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இன்னும் சிலரோ சைக்கிள் மற்றும் பைக் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சைக்கிள் (அ) மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் இல்லாத ஒரு சிலர் வாகனத்தை திருடி கொண்டு, சொந்த ஊர் செல்லும் சம்பவங்களும் தற்போது அதிகளவில் நடக்க தொடங்கியுள்ளன.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட இந்தியாவில், தொழிலாளி ஒருவர் ஒரு வீட்டில் இருந்து சைக்கிளை திருடி கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றார். ஆனால் சைக்கிள் திருடப்பட்ட வீட்டில், மன்னிப்பு கடிதத்தையும் அவர் எழுதி வைத்திருந்த சம்பவம் கவனம் பெற்றது. தற்போது அதே பாணியிலான ஒரு சம்பவம் தமிழகத்திலும் நடந்துள்ளது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஆனால் பைக்கை திருடிய தொழிலாளி, மன்னிப்பு கடிதம் எழுதி வைப்பதற்கு பதில், பைக்கையே பார்சலில் திருப்பி அனுப்பியுள்ளார். சுவாரஸ்யமான இந்த சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது. கோவை சூலூர் பகுதியில், லேத் பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ் குமார். இவரது பைக் கடந்த மே 18ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனவே சுரேஷ் குமார் பைக்கை தீவிரமாக தேடி வந்தார். ஆனால் பைக் கிடைக்காத காரணத்தால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்கும் பணியில் தீவிரமாக இருப்பதால், தற்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என சுரேஷ் குமாரிடம், காவல் துறையினர் கூறியதாக தெரிகிறது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இதன் காரணமாக இந்த விவகாரத்தை தானே விசாரிப்பது என சுரேஷ் குமார் முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அவர் பார்த்தார். இதில், அவருக்கு உபயோகமான தகவல்கள் கிடைத்தன. சுரேஷ் குமாரின் பட்டறைக்கு அருகே உள்ள டீ கடையில் வேலை செய்து வந்த பிரசாந்த் என்பவர்தான் பைக்கை திருடியிருந்தார்.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

டீ கடை ஊழியரான பிரசாந்த், மன்னார்குடியை சேர்ந்தவர். கோவையில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர்கள் தொலைவில் மன்னார்குடி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பிரசாந்த் வேலையை இழந்தார். எனவே தன் மனைவி மற்றும் குழந்தையை மன்னார்குடிக்கு அழைத்து செல்வது என பிரசாந்த் முடிவு செய்தார். இதன் காரணமாக பைக்கை திருடும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பொது போக்குவரத்து இல்லாததால், என்ன செய்வது? என தெரியாமல் இருந்த பிரசாந்த் பைக்கை திருடி தன் குடும்பத்தை சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். ஆனால் ஊருக்கு சென்று சேர்ந்த பின் பைக் திருட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதை, தன்னுடன் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மூலம் பிரசாந்த் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனவே சுரேஷ் குமாரின் பைக்கை திருப்பி ஒப்படைத்து விடுவது என பிரசாந்த் முடிவு செய்தார். போலீஸில் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில் அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது திருட்டு பொருள் எதற்கு என்ற நல்ல எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தாரா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. இதன்பின் அவர் நேராக ஒரு பார்சல் அலுவலகத்திற்கு சென்றார்.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பிரசாந்த் பைக்கை திருடியபோது அதில் ஆர்சி புக் இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு அவர் பைக்கை அனுப்பி வைத்தார். இதற்கு அவர் சுமார் 13 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின் கடந்த சனிக்கிழமை (மே 30ம் தேதி) சுரேஷ் குமாருக்கு பார்சல் ஏஜென்சியில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

திருடுபோன தனது பைக், பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை இதன் மூலமாக சுரேஷ் குமார் தெரிந்து கொண்டார். இதனால் சுரேஷ் குமார் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் பைக்கை பெறுவதற்காக சுரேஷ் குமார் 1,400 ரூபாயை, லக்கேஜ் மற்றும் பேக்கேஜிங் கட்டணமாக செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் நடந்துள்ள இந்த பைக் திருட்டு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இதுதொடர்பாக பைக் உரிமையாளரான சுரேஷ் குமார் கூறுகையில், 'எப்படியோ எனது பைக் எனக்கு திரும்ப கிடைத்து விட்டது. அதுவும் பைக் நல்ல கண்டிஷனில் இருக்கிறது. எனது பட்டறையை மீண்டும் திறந்த பிறகு, பைக் இல்லாமல் சிரமப்பட்டு வந்தேன்' என்றார். எப்படியோ பைக் கிடைத்து விட்டதால், சுரேஷ் குமார் போலீசில் அளித்த புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஆனால் சுரேஷ் குமாருக்கு கிடைத்ததை போல், திருடு போன வாகனங்கள், அனைவருக்கும் திரும்ப கிடைத்து விடும் என கூற முடியாது. எனவே வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். வாகனத்தை நிறுத்தி விட்டு செல்லும்போது மறக்காமல் சாவியை எடுத்து செல்லுங்கள். அத்துடன் வாகனங்களை பார்க்கிங் செய்ய பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம்.

கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஆனால் கொள்ளையர்கள் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி வாகனங்களை திருடி செல்கின்றனர். எனவே டிராக்கிங் டிவைஸ்களை வாகனங்களில் பொருத்தி கொள்வது நல்லது. வாகனம் திருடப்பட்டால், அதனை மீண்டும் கண்டுபிடிக்க டிராக்கிங் டிவைஸ்கள் உதவும். குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள், இதனை பரிசீலிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Migrant Worker Rides 300 KM On Stolen Bike, Returns It On Reaching Home. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X