Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாட்டு வண்டியில் தன்னை பூட்டி கொண்டு 25 கிமீ இழுத்து சென்ற இளைஞர்... காரணத்தை கேட்டு கலங்கும் மக்கள்
இளைஞர் ஒருவர் மாட்டு வண்டியில் தன்னை தானே பூட்டி கொண்டு 25 கிமீ இழுத்து சென்ற சம்பவம் இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் (கோவிட்-19), உலக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இன்று சரியாகி விடும், நாளை சரியாகி விடும் என நம்பி கொண்டிருந்த நாம் தற்போது கொரோனா வைரசுடன் வாழ்ந்து பழகி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். சீனாவின் வுஹானில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19, உலக பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தினக்கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் வேலையை பறிகொடுத்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்த அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு, கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், பின்னர் மே 3 மற்றும் மே 17ம் தேதி வரை என நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக தொழில்கள் அனைத்தும் முடங்கியதால், தினக்கூலி தொழிலாளர்கள் பலர் தங்கள் வேலையை இழக்க நேரிட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஒரு சிலருக்கு பல மாநிலங்களை கடந்து சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே சமயம் ஒரு சிலர் மாநிலத்திற்கு உள்ளேயே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளும் இயங்குவதில்லை. இப்படி பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி கிடப்பதால், ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து வருகின்றனர். இன்னும் சிலர் சைக்கிள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். நடந்தும், சைக்கிளிலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் தொழிலாளர்கள் பற்றிய உருக்கமான செய்திகள் தினந்தோறும் வெளி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் வைத்து இழுத்து சென்றுள்ளார். அந்த வண்டியின் ஒரு பக்கத்தில் மாட்டை பூட்டிய அவர், மறுபக்கத்தை தன் தோளில் சுமந்தபடி சென்ற நிகழ்வு பலரை கண் கலங்க செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர்தான் இந்த நெகிழ்ச்சிகரமான காரியத்தை செய்துள்ளார். இவர் அதே மாநிலத்தில் உள்ள மோவ் எனும் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். உடன் அவரது தந்தை, தங்கை, அண்ணன், அண்ணி ஆகியோரும் வசித்து வந்தனர். ராகுல் குடும்பத்தை கவனித்து கொண்டு தினக்கூலி வேலை செய்து வந்தார்.
ஆனால் ஊரடங்கு காரணமாக ராகுல் வேலையை இழக்க நேரிட்டதால், அவரது குடும்பம் பட்டியின் தவிக்கும் சூழல் உருவானது. ஆனால் ராகுல் மாட்டு வண்டி ஒன்றை வைத்துள்ளார். அந்த வண்டியை இழுப்பதற்கு பயன்படுத்திய 2 மாடுகளில் ஒன்றை, கையில் பணம் இல்லாத காரணத்தால் அவர் விற்பனை செய்து விட்டார். இதன் மூலம் அவருக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது.
பொதுவாக காளை மாட்டை விற்பனை செய்தால், 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவசரம் என்பதால், கிடைத்த விலைக்கு மாட்டை அவர் விற்பனை செய்து விட்டார். ஆனால் இந்த பணமும் செலவாகி விட்டதால், தனது சொந்த ஊருக்கே குடும்பத்துடன் சென்று விடுவது என ராகுல் முடிவெடுத்தார்.
இந்தூர் அருகே உள்ள நயதா முன்டலாதான் அவரது சொந்த ஊர். எனினும் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இல்லாததால், எப்படி செல்வது? என தெரியாமல் ராகுல் விழி பிதுங்கி நின்றார். அந்த நேரத்தில்தான் மாட்டு வண்டியிலேயே சென்று விடலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியது. ஆனால் அவரிடம் ஒரு மாடுதான் இருந்தது.
எனவே அந்த ஒரு மாட்டை வண்டியின் ஒரு பக்கத்தில் பூட்டி விட்டு, மற்றொரு பக்கத்தை தன் தோளிலேயே சுமந்தபடி தன் குடும்பத்தை அந்த வண்டியில் அமர வைத்து இழுத்து சென்றுள்ளார் ராகுல். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் இப்படி மாட்டு வண்டியை இழுத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே இது பெரிய விஷயம்தான்.
ராகுலின் குடும்பத்தில் சிலரும் அவ்வப்போது சிறிது தூரம் வண்டியை மாற்றி இழுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெரும்பாலான தூரம் ராகுல்தான் வண்டியை இழுத்து சென்றுள்ளார். அதுவும் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தன் குடும்பத்திற்காக இப்படி ஒரு காரியத்தை செய்த ராகுலுக்கு உண்மையிலேயே பெரிய மனசுதான்.
இடம்பெயரும் தொழிலாளர்கள் பற்றிய இத்தகைய செய்திகள் தினந்தோறும் வெளியாகி கொண்டிருப்பதால் தற்போது சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அத்துடன் ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, ஒரு சில இடங்களில் டாக்ஸிகளின் சேவையும் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!