Just In
- 26 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 32 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உலகையே நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்... இந்தியாவில் தலைகீழ் மாற்றம்... கொஞ்சம் அதிசயமாதான் இருக்கு...
கொரோனா வைரஸ் உலகையே நிலைகுலைய வைத்துள்ள நிலையில், இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனாவிற்கு பின்னர் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில், கோவிட்-19 வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனவே காற்றின் தரம் மேம்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது.
இதன்படி கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை 15.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 1.859 மில்லியன் டன்கள் பெட்ரோல் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 2.2 மில்லியன் டன்கள் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்தியாவில் அதிகம் நுகரப்படும் எரிபொருளான டீசல் விற்பனை 24.2 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 4.8 மில்லியன் டன்கள் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 6.34 மில்லியன் டன்கள் டீசல் விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஏவியேஷன் டர்பைன் ப்யூயலின் (Aviation Turbine Fuel - ATF) விற்பனையும் 31 சதவீதம் சரிந்துள்ளது. பேருந்து சேவைகளை போல, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏவியேஷன் டர்பைன் ப்யூயலின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள் நுகர்வை பொறுத்தவரை நடப்பு ஏப்ரல் மாதமும் இதே நிலைதான் நிலவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதி வரை (ஏப்ரல் 14) ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பின்பும் கூட, ஒரு சில கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் அறிகுறிகளும் தற்போது தென்பட்டு வருகின்றன. அதாவது படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே நடப்பு மாதமும் எரிபொருள் நுகர்வு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவிட்-19 வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில், அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டாலும் எடுக்கப்படலாம்.
ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் தற்போது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களின் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து, பெட்ரோல், டீசல் விற்பனையும் சரிந்துள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசலை அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவு எதிரொலியால், இந்தியாவில் தற்போது தலைகீழ் மாற்றமாக, பெட்ரோல், டீசல் நுகர்வு சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மற்றொரு விஷயத்திலும் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் தற்போது வாகன போக்குவரத்து முடங்கியுள்ளதால், காற்றின் தரம் மேம்பட தொடங்கியுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!