Just In
- 2 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 28 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 50 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...
வாகன ஓட்டிகளிடம் இருந்து தமிழக காவல் துறை அபராதமாக வசூல் செய்த தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து ஆட்டோ, டாக்ஸி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
தனியார் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கைதும் செய்யப்பட்டனர். அத்துடன் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் வாகனங்களை இயக்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஊரடங்கு நீடித்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். எனவே காவல் துறையினரின் நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து வருகிறது.
தேவை இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களின் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீதும் காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரையிலான (நேற்று) 140 நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி கடந்த 140 நாட்களில், ஊரடங்கை மீறியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக மொத்தம் 8,67,158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகும். அத்துடன் 9,57,743 பேர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் காவல் துறையினரால் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6,77,629 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விதிகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த 140 நாட்களில், ஒட்டுமொத்தமாக சுமார் 20.16 கோடி ரூபாயை தமிழக காவல் துறை அபராதமாக வசூலித்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு இன்னமும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இ-பாஸ் முறை அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்கு கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக இ-பாஸ் முறையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆனால் தமிழக அரசு இன்னமும் இ-பாஸ் முறையை திரும்ப பெறவில்லை. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் பேருந்துகளுக்கு மீண்டும் எப்போது அனுமதி வழங்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.
Note: Images used are for representational purpose only.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!