Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?
உரிய காரணம் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவை தாண்டி சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாட்டிலேயே மிக கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் மாநிலம் மஹாராஷ்டிராதான். அம்மாநில தலைநகர் மும்பை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிகளவில் வெளியே நடமாடுகின்றனர்.
ஊரடங்கிற்கு முன்னர் இருந்த நிலைமையை போன்று, மும்பையில் தற்போது வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, மும்பை பெரு நகர போலீசார் தற்போது அறிவித்துள்ளனர்.
இதன்படி உங்கள் வீட்டில் இருந்து, உரிய காரணம் இல்லாமல், 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து சென்றால், உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதாவது அலுவலகம் செல்வது மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் இருந்தால், உங்கள் வீட்டில் இருந்து, 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து செல்லலாம். ஆனால் தேவையில்லாமல் 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடக்க கூடாது.
அப்படி உரிய காரணம் எதுவும் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவை தாண்டி இயக்கப்படும் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பீச் மற்றும் பொது இடங்களில் மக்கள் இன்னமும் அதிகளவில் கூடுகின்றனர். இதன் காரணமாகதான் இப்படி ஒரு கட்டுப்பாட்டை மும்பை போலீசார் அறிவித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தாலும் அல்லது உடற்பயிற்சி செய்ய செல்வதாக இருந்தாலும், அவை அனைத்தும் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் நடக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை காவல் துறையினர் தற்போது அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
1. அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும். அனாவசியமாக வெளியே வரக்கூடாது.
2. வெளியிடங்களில் பயணம் செய்யும்போது, முக கவசம் அணிவது கட்டாயம்.
3. மார்க்கெட், சலூன் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லலாம். ஆனால் அது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். ஷாப்பிங் செய்வதற்காக வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
4. அதேபோல் உடற்பயிற்சி செய்வதற்கும் மக்கள் செல்லலாம். ஆனால் அதுவும் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.
5. அலுவலகம் செல்வது மற்றும் மருத்துவ ரீதியிலான அவசர தேவைகள் இருப்பவர்கள் மட்டும் 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
6. அனைத்து நேரங்களிலும், சமூக விலகல் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
7. மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
8. உரிய காரணம் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இயக்கப்படும் வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்.
இந்த விதிமுறைகளை எல்லாம் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அத்துடன் சமூக விலகல் விதிகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸை வீழ்த்த முடியும் எனவும், அந்த பொறுப்பு நமக்கு இருக்கிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை போலீசார் மட்டுமல்லாது, சென்னை உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அந்தந்த போலீசார் தேவையில்லாத வாகன இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்