Just In
- 56 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 4 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
டோல்கேட்களை தாக்கிய கொரோனா வைரஸ்... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது...
கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் டோல்கேட்களின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் இன்று மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 18,906 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 4,23,142 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், 1,09,145 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால், மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் இதைதான் வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கலெக்ஸன் ஒரு வாரத்தில் பாதியாக குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கடந்த ஒரு வாரத்தில் டோல் கலெக்ஸன் 50 சதவீதம் குறைந்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மக்களின் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது விதித்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி போயுள்ளதே டோல்கேட் கட்டண கலெக்ஸன் இவ்வாறு மிக கடுமையாக குறைந்து போயிருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (National Highways Authority of India - NHAI) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா முழுவதும் தற்போது பாஸ்ட்டேக் மூலமாகவே கிட்டத்தட்ட 70 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமையன்று பாஸ்ட்டேக்குகள் மூலமாக 33.12 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முந்தைய ஞாயிற்று கிழமையுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத சரிவாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் தினமும் சராசரியாக வசூலாகும் தொகை 85 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் தற்போது பாஸ்ட்டேக் மூலமாக நடைபெற்று வருகின்றன. எனவே டோல் கலெக்ஸனின் தற்போதைய நிலவரத்தை பாஸ்ட்டேக் எண்களே தெளிவாக கூறி விடுகின்றன. ரொக்க பணம் மூலமான டோல் கலெக்ஸனிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது'' என்றார்.
தற்போது மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையிலும், ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் வலம் வருகின்றனர். அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை தரப்பில் மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமென்றால், அரசாங்கத்திற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.
Note: Images used are for representational purpose only.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!