Just In
- 18 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 40 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டோல்கேட்களை தாக்கிய கொரோனா வைரஸ்... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது...
கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் டோல்கேட்களின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் இன்று மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 18,906 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 4,23,142 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், 1,09,145 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால், மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் இதைதான் வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாக இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கலெக்ஸன் ஒரு வாரத்தில் பாதியாக குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கடந்த ஒரு வாரத்தில் டோல் கலெக்ஸன் 50 சதவீதம் குறைந்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மக்களின் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது விதித்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி போயுள்ளதே டோல்கேட் கட்டண கலெக்ஸன் இவ்வாறு மிக கடுமையாக குறைந்து போயிருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (National Highways Authority of India - NHAI) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா முழுவதும் தற்போது பாஸ்ட்டேக் மூலமாகவே கிட்டத்தட்ட 70 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமையன்று பாஸ்ட்டேக்குகள் மூலமாக 33.12 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முந்தைய ஞாயிற்று கிழமையுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத சரிவாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் தினமும் சராசரியாக வசூலாகும் தொகை 85 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் தற்போது பாஸ்ட்டேக் மூலமாக நடைபெற்று வருகின்றன. எனவே டோல் கலெக்ஸனின் தற்போதைய நிலவரத்தை பாஸ்ட்டேக் எண்களே தெளிவாக கூறி விடுகின்றன. ரொக்க பணம் மூலமான டோல் கலெக்ஸனிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது'' என்றார்.
தற்போது மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையிலும், ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் வலம் வருகின்றனர். அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை தரப்பில் மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமென்றால், அரசாங்கத்திற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.
Note: Images used are for representational purpose only.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!