Just In
- 35 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 54 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது...
அமெரிக்காவை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவிற்கு ஏற்ப, வேலைகள் அதிரடியாக தொடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா வைரஸால் ஆட்டம் கண்டுள்ளன.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
உலகின் வல்லரசான அமெரிக்காவும் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பவில்லை. உலகிலேயே மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக வாகன தொழிற்சாலைகளில், உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி அங்கு தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னையை எதிர்கொள்ள தற்போது வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
எனவே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்கும்படி, ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் பல்வேறு நாடுகளின் அரசுகள் உதவி கேட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொண்டு, வென்டிலேட்டர்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதில், ஜென்ரல் மோட்டார்ஸ் (GM - General Motors) நிறுவனமும் ஒன்று.
அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வென்டிலேட்டர் உற்பத்தியை தொடங்கியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஜென்ரல் மோட்டார்ஸ் நேற்று (ஏப்ரல் 14ம் தேதி) அறிவித்தது.
அத்துடன் வென்டிலேட்டர்களின் முதல் பேட்ஜை நடப்பு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசாங்கத்திற்கு டெலிவரி செய்து விடுவோம் எனவும் ஜென்ரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, நடப்பு 2020ம் ஆண்டிற்குள், 1.37 லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கு, 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான 9 ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
இதில், ஜென்ரல் மோட்டார்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்ட 489.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தமும் அடங்கும். இந்த ஒப்பந்தப்படி, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க வேண்டும். தற்போது அதற்கான பணிகளை ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
வென்டெக் லைப் சிஸ்டம்ஸ் என்ற வென்டிலேட்டர் நிறுவனத்துடன் இணைந்து ஜென்ரல் மோட்டார்ஸ் வேலை செய்து வருகிறது. வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். நடப்பு ஏப்ரல் மாதம் முதல் பேட்ஜாக 600க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை வழங்கி விடுவோம் என ஜென்ரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.
அத்துடன் வரும் ஜூன் மாத இறுதிக்குள் ஒப்பந்தத்தில் பாதி வென்டிலேட்டர்களை வழங்கி விடுவோம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஒப்பந்தப்படி அனைத்து வென்டிலேட்டர்களையும் வழங்க ஜென்ரல் மோட்டார்ஸ் முயன்று வருகிறது. அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வென்டிலேட்டர்கள் உதவிகரமாக இருக்கும்.
வென்டிலேட்டர்களை தயாரிக்கும் விவகாரத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் நேரத்தை வீணடிக்கிறது என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதன்பின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் பணிகளை துரிதப்படுத்தியது. இதைப்பார்த்த டிரம்ப், அதன்பின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டினார். ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, உலகின் மற்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், டெஸ்லா, ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த பணிகளுக்கு உதவி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.