Just In
- 18 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 35 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 54 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
வேகமாக பரவும் கொரோனா... வெளியானது முக்கிய அறிவிப்பு... தமிழக மக்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு, இன்று முதல் அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) இன்று ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளன. பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்தியாவில் முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு இன்றுடன் (ஏப்ரல் 14) முடிவுக்கு வருவதாக இருந்தது.
ஆனால் இன்று காலை நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உரையாற்றினார். அப்போது நாடு தழுவிய ஊரடங்கை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பலர் வெளியே சுற்றி வருகின்றனர். சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், அதை பயன்படுத்தி கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி கொள்ள இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.
கொரோனா வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். முதலில் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் தடியடி நடத்தியதை பார்க்க முடிந்தது. அத்தகைய வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
ஆனால் காவல் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அதன்பின்பு காவல் துறை அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றி கொண்டனர். இதன்படி வாகன ஓட்டிகளுக்கு கோவிட்-19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தேர்வை நடத்துவது, தோப்புக்கரணம் போட வைப்பது போன்ற வித்தியாசமான நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர்.
எனினும் அப்படியும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊர் சுற்றி கொண்டேதான் இருந்தனர். எனவே அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வது, அபராதம் விதிப்பது மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுக்க தொடங்கினர். குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 1,87,623 பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியே கொண்டு வரப்பட்ட 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளிடம் இருந்து 76,96,544 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவது கட்டுக்குள் வரும் என காவல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இனி முக கவசம் அணிந்து கொண்டுதான் மக்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
மாஸ்க் அணியாமல் வாகனங்களை ஓட்டினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன.
ஆனால் வாகனம் ஓட்டும்போது மட்டும் முக கவசம் அணிந்தால் போதும் என்று நினைத்து விட வேண்டாம். நடந்து சென்றாலும் கூட மாஸ்க் அணிவது அவசியம். அதாவது நீங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால், வாகனம் ஓட்டினாலும் சரி அல்லது நடந்து சென்றாலும் சரி மாஸ்க் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் கட்ட நேரிடும். எனவே இனி கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!