Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா... கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்... இப்போதான் வேகம் எடுக்குது...
கொரோனா வைரஸால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவை நிறைவேற்றும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 35,334 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 7,41,777 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ், சீனா, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் என உலகின் பல்வேறு நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், மருத்துவ உபகரணங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வென்டிலேட்டர்கள்தான் அதிக அளவில் தேவைப்படுகின்றன. கோவிட்-19 வைரஸ் நோயாளிகளின் சுவாச மண்டலத்தை தாக்க கூடியது என்பதால், வென்டிலேட்டர்களின் தேவை அதிகளவில் உள்ளது. எனவே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தரும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை பல்வேறு நாடுகளின் அரசுகளும் நாடியுள்ளன.
உலக வல்லரசான அமெரிக்காவும் இதில் ஒன்று. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம், வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருப்பதால், வென்டிலேட்டர்களை விரைவாக தயாரித்து வழங்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதனை ஏற்று கொண்டன. எனினும் வென்டிலேட்டர்கள் விவகாரத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் காட்டமாக விமர்சனம் செய்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.
ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை முதலில் விமர்சனம் செய்து விட்டு தற்போது டிரம்ப் பாராட்டியிருப்பது கவனம் பெற்றுள்ளது. ''ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான பணியை செய்து வருகிறது. எனவே ஜென்ரல் மோட்டார்ஸை பற்றி நாம் கவலைப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை'' என்று டிரம்ப் நேற்று (மார்ச் 29) கூறியுள்ளார்.
''உண்மையில் அவர்கள் மிக மிக கடினமாக உழைக்கிறார்கள். ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பற்றி நல்ல விதமான அறிக்கைகள் எனக்கு கிடைப்பதாக நான் நினைக்கிறேன்'' எனவும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆனால் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் நேரத்தை வீணடிக்கிறது என்கிற ரீதியில் டிரம்ப் முதலில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
எனவே ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கோகோமா இன்டியானா பிளாண்ட்டில், வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை புகைப்படமாக எடுத்து நேற்று வெளியிட்டது. கோடை காலத்தில் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வென்டிலேட்டளை தயாரிக்கும் பணிகள் வேகம் எடுத்திருப்பது நல்ல செய்திதான். இந்தியாவை பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முன் வந்துள்ளது. அதற்கு ஏற்ப வென்டிலேட்டரின் புரோட்டோடைப்பை வெறும் 48 மணி நேரங்களில் மஹிந்திரா உருவாக்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!