Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா ஹெல்மெட்டிற்கு காரணம் இதுதான்... தமிழ்நாடு போலீஸ் எப்பவுமே வேற லெவல்... தூள் கௌப்புங்க சார்
சென்னையில் கொரோனா ஹெல்மெட் அணிந்து காவல் துறை அதிகாரி பணியாற்றி வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலக மக்கள் இன்று அதிகம் உச்சரிப்பது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். ஒன்று கொரோனா வைரஸ். மற்றொன்று கோவிட்-19. கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 28,244 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 6,14,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட்-19 வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன. இதில், சீனா மட்டும் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. சீனா மீது பல்வேறு சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
எனினும் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அத்தியாவசியம் இல்லாமல் ஒரு சிலர் வாகனங்களில் உலா வந்து கொண்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், அதில் ஜாலி ரைடு செல்வதற்காக இப்படி சிலர் வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் புரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அவசியம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் வழக்கு பதிவும் செய்யப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை காவல் துறையினர் தாக்கிய சம்பவங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதவிர வித்தியாசமான ஒரு சில முயற்சிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி தேவை இல்லாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வை கன்னியாகுமரி போலீசார் நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சென்னை காவல் துறையும் கவனம் ஈர்த்துள்ளது. ஆம், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை காவல் துறை அதிகாரி ஒருவர் கொரோனா ஹெல்மெட்டை அணிந்துள்ளார்.
வாகன ஓட்டிகளுக்கு கோவிட்-19 வைரஸின் தீவிரம் இன்னும் புரியவில்லை. எனவே பலர் வீடுகளில் இருந்து வெளியே வந்து கொண்டுள்ளனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கொரோனா வைரஸ் ஹெல்மெட்டை கௌதம் என்ற கலைஞர் டிசைன் செய்துள்ளார்.
இது குறித்து கௌதம் கூறுகையில், ''பொதுமக்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸை இன்னமும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. மறுபக்கம் மக்களை வீடுகளில் இருக்க வைப்பதற்காக, காவல் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். எனவேதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது'' என்றார்.
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஹெல்மெட் உதவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் பாபு என்பவர் பயணிகளிடம் பேசுகையில் இந்த ஹெல்மெட்டை அணிகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் இன்னமும் சாலைக்கு வந்து கொண்டுள்ளனர்.
எனவே கோவிட்-19 வைரஸின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஹெல்மெட்டை பயன்படுத்துகிறோம். ஏதேனும் ஒன்றை வித்தியாசமாக செய்யும் முயற்சிதான் இந்த ஹெல்மெட். நான் இந்த ஹெல்மெட்டை அணியும்போது, பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய எண்ணம் மனதில் வரும்'' என்றார். நீங்க கலக்குங்க சார்!!!
Image Courtesy: ANI
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!