Just In
- 35 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மோடி திறந்து வைத்த 14 வழி சாலை 2 மாதத்தில் சேதம்; அம்பலமாகிறது இமாலய ஊழல்?
மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த 14 வழிச்சாலை ஒரு மழைக்கே தாங்காமல் சேதமடைந்தது. சுமார் 11 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்பதியில் அடைந்துள்ளனர்
மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த 14 வழிச்சாலை ஒரு மழைக்கே தாங்காமல் சேதமடைந்தது. சுமார் 11 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்பதியில் அடைந்துள்ளனர்.மேலும் இந்த சாலை கட்டமைப்பில் பெரிய அளவில் ஊழில் இருக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது. இது குறித்து முழு செய்தியை கீழே பார்க்கலாம்
ரூ 11 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட டில்லி - மீரட்டை இணைக்கும் 14 வழி அதி நவீன சாலையை கடந்த மே மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டில்லியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், தேசிய தலைநகர் பகுதிக்கான போக்குவரத்து வசதியை அதிகரிக்கவும் இந்த சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் கிரின் சாலையாக கருதப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலையில் இடையில் எங்கே இருந்தும் உள்நுழைய முடியாமல் சரியாக என்ட்ரி எக்ஸிட் வழியாக மட்டும் பணிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 4 பெரிய பாலங்கள், 46 சிறிய பாலங்கள், 3 மேம்பாலங்கள், 7 பாதை மாற்றும் பாலங்கள், 221 கீழ் மட்ட பாலங்கள், 8 சாலை மேம்பாலங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை முழுவதும் சோலார் பவரால் இயங்ககூடிய விடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை பகுதியிலேயே சுமார் 4 ஆயிரம் கி.வாட் திறன் கொண்ட பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தூரமான சுமார் 135 கி.மீ தூரத்தில் 36 தேசிய புராதான சின்னங்கள், 40 நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சாலையில் நெடுஞ்சாலை போக்குவரத்து மேம்பாட்டு கட்டமைப்பு, மற்றும் வீடியோ இன்டிகேஷன் டிடெக்ஷன் சிஸ்டம் என பல உயர்தர தொழிற்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த நெடுஞ்சாலை சுற்றுசுழலை மாசு படுத்தா வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் மற்றும் ஒவ்வோர் ஐந்நூறுமீட்டர் தூரத்துக்கும் மழைநீர் சேகரிப்பு வசதி, வாகனங்களின் எடையைச் சோதிக்கும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன
இந்த சாலையின் கட்டமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்ட 500 நாட்களிலேயே முடிந்தது. இது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சாலைகள் தரமற்றதாக அமைக்கப்பட்டுள்ளது
தற்போது தெரியவந்துள்ளது. சாலையில் ஒட்டி அமைக்கப்பட்ட ரோட்டில் நடுவில் பெரும் ஏற்கனவே டில்லி- மீரட்டை இணைக்கும் நெடுஞ்சாலை மிக நெருக்கடி மிகுந்ததாகவும், இருந்ததால் தான் இந்த சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த சாலை அவசர அவசரமாககட்டப்பட்டதால் தரமான சாலையாக இல்லாமல் போயுள்ளது. இதனால் அரசிற்கு இதை சீரமைக்க மேலும் பணம் செலவாகும்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ``டெல்லியில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்" என அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் அப்பகுதியில் நெடுஞ்சாலைக்கான கட்டமைப்பு நடந்து தான் வருகிறது அதுவாவது தரமானதாக கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை கட்டமைக்கப்பட்ட செலவு செய்த பணத்தில் பெரிய அளவிலான ஊழல்கள் இருக்கலாம் எனவும் இதனால்தான் சாலைகள் தரமில்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டசெய்திகள்
- கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்
- டிவிஎஸ், ஹோண்டாவை கலங்கடித்த சுஸுகி.. வெறும் 12 நாட்களில் 11,000 பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனை!
- மாருதிக்கு என்ன ஆச்சு? டொயோட்டா ஜோராச்சு..
- கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை
- ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. வருமானம் பார்க்க விரும்பாத அதிபர்
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!