Just In
- just now கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரலாகும் வீடியோ... விலை உயர்ந்த பென்ஸ் காரை பறவைக்கு விட்டு கொடுத்த பிரபல மனிதர்... யார் தெரியுமா?
பிரபல மனிதர் ஒருவர் விலை உயர்ந்த பென்ஸ் காரை பறவைக்கு விட்டு கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகனங்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், பூனை போன்ற விலங்குகளும், சிட்டுக்குருவி போன்ற பறவைகளும், அதனை தங்களின் இருப்பிடமாக மாற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
எனவே வாகன பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. இப்படி பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் பறவைகள் கூடு கட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டரில் பறவை கூடு கட்டிய தகவல் வெளியானது.
பறவை கூடு கட்டியதால், சுமார் 3 மாதங்களாக அவர் ஸ்கூட்டரை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார். இந்த வரிசையில் உலக நாடுகளின் மக்களுக்கு நன்கு அறிமுகமான மனிதர் ஒருவரும், பறவை கூடு கட்டியதால், தனது காரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்தான் அந்த மனிதர்.
இவர் துபாய் நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், வாகனங்களை பயன்படுத்துவதை துபாய் பட்டத்து இளவரசர் குறைத்து கொண்டுள்ளார். இதனால் அவர் அடிக்கடி பயன்படுத்தும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) கார் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த காரில் தற்போது பறவை ஒன்று கூடு கட்டியுள்ளது. துபாயில் உள்ள பட்டத்து இளவரசரின் வீட்டு வாகன நிறுத்துமிடத்தில் இந்த கார் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பறவை கூடு கட்டியிருப்பதால், அந்த காருக்கு அருகே கூட துபாய் பட்டத்து இளவரசர் செல்வதில்லை. மேலும் வேறு யாரும் அந்த காருக்கு அருகில் செல்லக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பறவை கூடு கட்டியிருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. யாரும் அருகே சென்று பறவைக்கு தொந்தரவை ஏற்படுத்த கூடாது என்பதற்காக, அந்த காரை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை துபாய் பட்டத்து இளவரசர் அமைத்துள்ளார். அத்துடன் காரில் பறவை கூடு கட்டியிருக்கும் காணொளியை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பறவை பயந்து விடக்கூடாது என்பதற்காக தொலைவில் இருந்துதான் இந்த காணொளியை துபாய் பட்டத்து இளவரசர் எடுத்துள்ளார். காரின் பானெட்டில் பறவை கூடு கட்டியிருப்பதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. அவர் அதனை நமக்கு 'ஜூம்' செய்து காட்டியுள்ளார். தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
இதற்காக துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன. துபாய் பட்டத்து இளவரசர் விலங்குகள் மற்றும் பறவைகளை அதிகமாக நேசிக்க கூடியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு தற்போதைய சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. அவர் பல்வேறு விலங்குளை பாசமாக வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்