Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரே வாரத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய 624 பேர்... காரணம் தெரிஞ்சா கட்டாயம் இனி இதை செய்ய மாட்டீங்க!!
போலீஸாரின் அதிரடி நடவடிக்கயைால் ஒரே வாரத்தில்
624 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக நாடுகளில் உள்ள சாலைகள் சந்திக்காத பல்வேறு பிரச்னைகளை நமது இந்தியச் சாலைகள் சந்தித்து வருகின்றது. அந்தவகையில், போக்குவரத்து விதிமீறல், அதனால் ஏற்படும் விபத்து மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களினால் உருவாகும் பின்விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அது சந்தித்து வருகின்றது.
மேலும், அண்மைக் காலங்களாக முன்பெப்போதும் காணாத அளவில், வாகனங்கள் சார்ந்த குற்றச் சம்பவங்கள் அதிகரித்து, போக்குவரத்துத்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றது.
அவை, சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், சுற்றுப்புற சூழுலக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஆகையால், இத்தகைய செயல்களை தவிர்க்கும் விதமான முயற்சியில் தெலங்கானா மாநிலத்தின் சைபராபாத் போலீஸார் களமிறங்கியுள்ளனர்.
அந்தவகையில், அதிகளவில் ஒலியை எழுப்பிக்கொண்டு சாலையில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், தங்களது வாகனத்தில் முறைகேடான அல்லது அதிக ஒலியை எழுப்பிய ஹாரனை பயன்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய முறைகேடான வாகன ஓட்டிகளைக் கண்டறிய, ஒலியை அளவிடும் பிரத்யேக கருவியை அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்த ஹாரன்களில் இருந்து வெளிவரும் அதிகளவு ஒலி, சக வாகன ஓட்டிகளை அச்சுறுவது மட்டுமின்றி, ஒலி மாசுபாட்டையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், பெரும் இடையூறாக அமைகின்றது.
அந்தவகையில், தேவையில்லாமல் ஒலிக்கப்பப்படும் ஹாரன்களால், தங்களின் இறவு தூக்கம் மற்றும் அமைதியான சூழல் சீர்குலைவதாக, பொதுமக்கள் சிலர் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கையை சைபரபாத் போலீஸார் எடுத்துள்ளனர்.
அவ்வாறு, கச்சிபவுலி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற இளம்பெண் அளித்த புகாரில், "அதிகபடியான ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களால் நகரம் மிகப்பெரிய பிரச்னையைச் சந்தித்து வருகின்றது. சிக்னல் சிவுப்பு பகுதியில் இருந்தாலும் வாகன ஓட்டிகள் சிலர் ஹாரனை ஒலித்தவாறு இருக்கின்றனர். எனது, வீடு பிரதான சாலை ஒன்றின் மிக அருகில் இருக்கின்றது. அங்கு, சாதாரணமாக காலியான சாலையில் செல்லும் வாகனங்கள்கூட ஹாரனை ஒலித்தவாறு செல்கின்றன. இதனால், என் வீட்டின் ஜன்னல் எப்போதுமே அடைத்தவாறே வைக்கப்பட்டுள்ளது" என வேதனை தெரிவித்திருந்தார்.
அதேபோன்று, ஐடி துறை ஊழியாரான ஹர்ஷா ரெட்டி கூறுகையில், "அலுவல் நேரங்களில் சாலையில் பயணிப்பது என்பது மிகவும் அச்சுறுத்தலான விஷயமாக மாறியுள்ளது. போக்குவரத்துத்துறை போலீஸாரால் மேற்கொண்டு வரும் இந்த துரித நடவடிக்கை, தற்போதைய சூழலைக் கட்டுபடுத்தும் என நம்புகிறேன்" என்றார்.
இதுபோன்ற, புகார்களின் காரணமாக போலீஸார், அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், அதிக ஒலியை எழுப்பியவாறு சென்ற லாரி, பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அவர்கள் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையினையும் போலீஸார் எடுத்து வருகின்றனர். அவ்வாறு, தேவையற்ற நேரங்களில் ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்க, வாகன ஓட்டிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், திருமண மண்டபம் மற்றும் மஹால்களில் அதிகளவிலான ஒலிப்பான்களை பயன்படுத்தவதை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
முக்கியமாக, பள்ளக்கூடம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் இத்தகைய செயலை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மதபூர் உதவி காவல் ஆணையர் (போக்குவரத்து) சந்திரசேகர் கூறியதாவது, "ஒலி மாசுபாட்டிற்கு எதிரான முயற்சியை நாங்கள் தொடர இருக்கின்றோம். அதற்காக, அனைத்து வாகன ஓட்டிகளிடமும், அதிக சத்தத்திலான ஹாரன்களையும், பலவிதமான ஒலிகளை எழுப்பும் ஹாரன்களையும் பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். மீறினால், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையில், கனரக வாகனங்களான ஸ்கூல் மற்றும் கல்லூரி பேருந்துகள், ஆர்டிசி பேருந்துகள், லாரிகள், டேங்கர் மற்றும் டிரக் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவிலான ஒலியை வெளிப்படுத்தும் ஹாரன்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. அத்தகைய வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்கள்மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, அண்மையில்கூட அதிக ஒலியை எழுப்பும் எக்சாஸ்ட் சிஸ்டத்திற்கு எதிரான நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். அவ்வாறு, ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும், சைலென்சர்களை பயன்படுத்தி வாகனங்களை மடக்கிய போலீஸார், அவற்றை அங்கே பறிமுதல் செய்து ஜேசிபி மற்றும் ரோட் ரோல்லர் வாகனங்கள் அழித்து வந்தனர்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?