Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெருந்தொகையை ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டம்... அட இதுதாங்க மக்களாட்சி!!
இதுதான் மக்களாட்சி என கூறும் வகையில் தலைநகர் டெல்லியில் அதிரடி நடவடிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகின்றார். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வருமானத்தை இழந்து தவித்து வரும் ஆட்டோ மற்றும் கால்டாக்சி டிரைவர்களுக்கு நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கோவிட்-19 வைரசால் எண்ணற்ற பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகின்றது. நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்படவில்லை என்றாலும் ஏதேனும் ஓர் காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தாத மாநிலங்களிலும்கூட மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியிருக்கின்றது.
குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை முழுமையாக தவிர்த்திருக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் மட்டும் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருவதை நம்மால் காண முடிகின்றது.
ஆனால், பொது போக்குவரத்து வாகனங்கள் முழுமையாக முடங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதனால், வாடகை ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக தொடங்கியிருக்கின்றனர். போதிய வருமானம் கிடைக்காததால் அன்றைய தினத்தை கடத்துவதற்கே அவர்கள் மிக சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இஎம்ஐ மற்றும் வாகன கடன் போன்றவற்றால் வாடகை வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் செலுத்த திட்டமிட்டிருக்கின்றது.
வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களின் வறுமையைப் போக்கும் வகையில் இந்த நிதி உதவி திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்திருக்கின்றது. மே4ம் தேதியே இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டநிலையில் தற்போது வாடகை வாகன ஓட்டுநர்களின் வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்ஜ் மற்றும் பர்மிட்டுகளைக் கொண்டிருக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களின் ஆதார்கார்டு சரிபார்க்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகின்றது. தற்போது டெல்லியில் மட்டும் 2.80 லட்சம் பிஎஸ்வி பேட்ஜ் வைத்திருப்பவர்களும், 1.90 லட்சம் பேர் பெர்மிட் வைத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.
இவர்களுக்கே ரூ.5000 ஆயிரம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறியதாவது, "முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டியிருப்பதால் நிதி உதவி சிலருக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "முழு ஊரடங்கினால் ஏற்படும் தாக்கங்களை கணிசமாக குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், குறிப்பாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உட்பட அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு இந்த அரசு உதவியாக நிற்கும்" என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு (2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் இதேபோன்று டெல்லி அரசு ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு உதவியளிக்கும் வகையில் நிதித்தொகையை வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!