திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, வைரலாவதுடன், காண்பவர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நம்மை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

இந்த வீடியோவில் கார் ஒன்று அதிவேகத்தில், தாறுமாறாக வருவதை நம்மால் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண் மீது அந்த கார் மோதுகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த பெண் கீழே விழுகிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்பதற்காக ஓடி வருகின்றனர்.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

அதற்கு பிறகு நடந்ததோ, அதிர்ச்சியின் உச்சம். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர், மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கீழே விழுந்த கிடந்த பெண் மீதே மீண்டும் காரை ஏற்றினார். இதனால் அந்த பெண் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இவ்வளவு களேபரங்களுக்கு பிறகுதான் அந்த கார் ஒருவழியாக நின்றது. ஆனால் அதற்குள் அந்த பெண் படுகாயம் அடைந்து விட்டார்.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

எனவே பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கிழக்கு டெல்லியில் இருக்கும் சில்லா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 3ம் தேதி) இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய பெண் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

இதில், மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்தது டெல்லி காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பதுதான். அவர் குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதை விட அதிர்ச்சி. இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

அதை தடுக்க வேண்டிய காவல் துறையினரே, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இத்தகைய கொடூரமான விபத்துக்களை ஏற்படுத்துவது நாம் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். தற்போது அந்த எஸ்ஐ, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

விபத்து நடைபெற்றபோது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என்றனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த கொடூரமான விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் இத்தகைய விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் திறனையும், முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுவதால், இத்தகைய விபத்துக்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது.

திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது

குடிபோதையில் வாகனங்களை இயக்கினால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள். உங்களுக்கு குடிபோதையில் வாகனம் இயக்கும் பழக்கம் இருக்கும்பட்சத்தில், இதனை மனதில் வைத்து, இன்றோடு அந்த பழக்கத்தை அடியோடு விட்டு விடுவது நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: Drunk Police Sub-inspector Rams Car Into Woman - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X