Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது
போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, வைரலாவதுடன், காண்பவர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நம்மை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் கார் ஒன்று அதிவேகத்தில், தாறுமாறாக வருவதை நம்மால் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண் மீது அந்த கார் மோதுகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த பெண் கீழே விழுகிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்பதற்காக ஓடி வருகின்றனர்.
அதற்கு பிறகு நடந்ததோ, அதிர்ச்சியின் உச்சம். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர், மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கீழே விழுந்த கிடந்த பெண் மீதே மீண்டும் காரை ஏற்றினார். இதனால் அந்த பெண் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இவ்வளவு களேபரங்களுக்கு பிறகுதான் அந்த கார் ஒருவழியாக நின்றது. ஆனால் அதற்குள் அந்த பெண் படுகாயம் அடைந்து விட்டார்.
எனவே பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கிழக்கு டெல்லியில் இருக்கும் சில்லா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 3ம் தேதி) இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய பெண் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்தது டெல்லி காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பதுதான். அவர் குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதை விட அதிர்ச்சி. இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
அதை தடுக்க வேண்டிய காவல் துறையினரே, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இத்தகைய கொடூரமான விபத்துக்களை ஏற்படுத்துவது நாம் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். தற்போது அந்த எஸ்ஐ, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.
விபத்து நடைபெற்றபோது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என்றனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த கொடூரமான விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் இத்தகைய விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் திறனையும், முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுவதால், இத்தகைய விபத்துக்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது.
குடிபோதையில் வாகனங்களை இயக்கினால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள். உங்களுக்கு குடிபோதையில் வாகனம் இயக்கும் பழக்கம் இருக்கும்பட்சத்தில், இதனை மனதில் வைத்து, இன்றோடு அந்த பழக்கத்தை அடியோடு விட்டு விடுவது நல்லது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!