Just In
- 46 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது
போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, வைரலாவதுடன், காண்பவர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நம்மை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் கார் ஒன்று அதிவேகத்தில், தாறுமாறாக வருவதை நம்மால் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண் மீது அந்த கார் மோதுகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த பெண் கீழே விழுகிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்பதற்காக ஓடி வருகின்றனர்.
அதற்கு பிறகு நடந்ததோ, அதிர்ச்சியின் உச்சம். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர், மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கீழே விழுந்த கிடந்த பெண் மீதே மீண்டும் காரை ஏற்றினார். இதனால் அந்த பெண் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இவ்வளவு களேபரங்களுக்கு பிறகுதான் அந்த கார் ஒருவழியாக நின்றது. ஆனால் அதற்குள் அந்த பெண் படுகாயம் அடைந்து விட்டார்.
எனவே பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கிழக்கு டெல்லியில் இருக்கும் சில்லா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 3ம் தேதி) இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய பெண் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்தது டெல்லி காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பதுதான். அவர் குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதை விட அதிர்ச்சி. இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.
அதை தடுக்க வேண்டிய காவல் துறையினரே, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இத்தகைய கொடூரமான விபத்துக்களை ஏற்படுத்துவது நாம் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். தற்போது அந்த எஸ்ஐ, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.
விபத்து நடைபெற்றபோது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என்றனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த கொடூரமான விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் இத்தகைய விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் திறனையும், முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுவதால், இத்தகைய விபத்துக்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது.
குடிபோதையில் வாகனங்களை இயக்கினால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள். உங்களுக்கு குடிபோதையில் வாகனம் இயக்கும் பழக்கம் இருக்கும்பட்சத்தில், இதனை மனதில் வைத்து, இன்றோடு அந்த பழக்கத்தை அடியோடு விட்டு விடுவது நல்லது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!