Just In
- 3 min ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
Don't Miss!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் டிவைஸ் மூலம் ஆப்பு வைத்த முதல்வர்
அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் சிலர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, அதிரடியான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக, அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு சில அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக, தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன.
எனவே ஒரு அரசு அதிகாரி, ஒரே ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநில அரசின், பொது நிர்வாக துறை (General Administration Department) இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு சில அரசு அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இதை காரணம் காட்டி, அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கூடுதல் பொறுப்புகளை கவனித்தாலும், ஒரு அதிகாரி ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக பயன்படுத்தி வந்த வாகனங்களை, அந்தந்த துறைகளின் தலைவர்களிடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அரசாங்க வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள்தான், கூடுதல் வாகனங்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சென்றது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக வீண் செலவீனங்களை குறைக்க முடியும் எனவும் டெல்லி மாநில அரசு நம்புகிறது.
இதுதவிர, அரசாங்க வாகனங்கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்காக தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்கள் என அனைத்து வாகனங்களிலும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் பொருத்த நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து எந்த ஒரு வாகனமும், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் இல்லாமல் இயங்க கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், எங்கெங்கு செல்கின்றன? என்பதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!