Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கிய காவல்துறை.. வச்சுட்டாங்களா ஆப்பு!
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் அடங்கிய கேமிராவைப் பயன்படுத்த இருப்பதாக தலைநகரத்தின் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டின் பல முக்கியமான பிரச்னைகளில், தலையாய பிரச்னையாக போக்குவரத்து விதிமீறல்கள் பார்க்கப்படுகின்றன. ஆகையால், இதனை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக மத்திய அரசு, அண்மையில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ அறிமுகம் செய்தது.
இது, நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இது அமலுக்கு வந்த நாள் முதல் பெரும் பரப்பையும், களோபரத்தையும் ஏற்படத்திய வண்ணம் உள்ளது. இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் உச்சபட்ச அபராதத் தொகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இது, முன்னதாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, அதிகபட்ச அபராதத்தை பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்தான பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற ஒரு சில மாநிலங்கள் இதனை ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன.
அவ்வாறு, அது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து பெரும் பரபரப்பான மற்றும் சுவாரஷ்யமான தகவல்களே அந்த மாநிலங்களில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதிலும், சமீபத்தில் விதிக்கப்பட்ட உச்சபட்ச அபராதம் குறித்த தகவல் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது. இதற்கு, விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி லாரி ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அதிகபட்ச அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
அந்தவகையில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது, மித மிஞ்சி சுமை மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக ரூ. 6,53,100-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது. இதுவே இது நாடு முழுவதும் வைரலாகியதற்கு காரணம்.
இவ்வாறு, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் புது டெல்லியிலும் விதிமீறல்களை தவிர்ப்பதற்காக சிறப்பு நடவடிக்கை ஒன்றை அம்மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், அதிகவேகமாக செல்லக்கூடிய வாகனங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்ட கேமிராவை நகரின் சில முக்கிய சாலைகளில் பொருத்த டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த கேமிராக்கள் அதிகவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிவது மட்டுமின்றி அந்த வாகனத்தின் பதிவெண்ணை கண்டறிந்து, அபராத செல்லாணை அனுப்பி வைக்க உதவும்.
இத்தகைய திறன் கொண்ட 25 புத்தம் புதிய கேமிராக்களை நகரின் 12 முக்கிய பகுதிகளில் டெல்லி போலீஸார் கடந்த ஞாயிறன்று பொருத்தியுள்ளனர். இது அதிக வேக விதிமீறல் மட்டுமின்றி வேறு போக்குவரத்து விதிமீறல்களையும் கண்டறிய பயன்படும்.
இந்த கேமிராக்கள் தற்போது தேசிய நெடுஞ்சாலை 24ஐ சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பகுதி மட்டுமின்றி, நகரத்தின் முக்கிய இடங்களான ஐஎஸ்பிடி-ஐடிஓ, பூசா ரோட், தஹுலா-நரைனா, ஜேஎன்யூ பல்கலைக்கழகம், மசூத்பூர், நெல்சன் மண்டேலா சாலை, க்ராண்டி மார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், அவை தற்போதுதான் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் சில பகுதிகளிலும் புதிதாக கேமிராக்கள் நிறுவும் பணி தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பிரத்யேக தொழில்நுட்பம் அடங்கிய கேமிராக்கள் பொருத்தும் பணி மற்றும் இதற்கான செலவுகளை மாருதி உத்யோக் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த செயலை இந்நிறுவனம், சிஎஸ்ஆர் எனப்படும் திட்டத்தின்கீழ் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாட்டில் அபராத மழை பொழிந்த வண்ணம் உள்ளது. அதேசமயம், இதன் பாதிப்பாக வாகன ஓட்டிகள் தங்களது சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொதுவாகனங்களையே போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தகவல் கூறப்படுகின்றது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!