Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்
பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை சாலையில் இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அல்லது அவர்களுடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும்.
டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை நேற்று (ஜூன் 15) இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆயுள் முடியும் நிலையில் உள்ள வாகனங்களை சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய வாகனங்களை கண்டறிவதற்காக, சிறப்பு வாகன சோதனை எதுவும் உடனடியாக மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி டெல்லி சாலைகளில் இயக்கப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். பழைய மோட்டார் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போக்குவரத்து துறை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அத்துடன் முதல் ஸ்கிராப்பிங் மையத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அங்கீகாரம் பெற்ற ஸ்கிராப்பிங் மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. எனினும் தற்போது வரை வெறும் 2,879 பழைய வாகனங்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 31ம் தேதி வரையிலான அரசின் தரவுகள் மூலம் தெரியவந்த அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் மூலம் வரும் நாட்களில் ஸ்கிராப் செய்யப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் திட்டமிடவில்லை. எனினும் வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இதை தொடர்ந்து வரும் நாட்களில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகும். ஆனால் சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சம். இதில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.
அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும்'' என்றனர். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்குவதை உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தடை செய்தது.
மேலும் இத்தகைய வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கும்படியும் போக்குவரத்து துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து துறை தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அத்துடன் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!