Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்
பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை சாலையில் இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அல்லது அவர்களுடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும்.
டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை நேற்று (ஜூன் 15) இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆயுள் முடியும் நிலையில் உள்ள வாகனங்களை சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய வாகனங்களை கண்டறிவதற்காக, சிறப்பு வாகன சோதனை எதுவும் உடனடியாக மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி டெல்லி சாலைகளில் இயக்கப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். பழைய மோட்டார் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போக்குவரத்து துறை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அத்துடன் முதல் ஸ்கிராப்பிங் மையத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அங்கீகாரம் பெற்ற ஸ்கிராப்பிங் மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. எனினும் தற்போது வரை வெறும் 2,879 பழைய வாகனங்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 31ம் தேதி வரையிலான அரசின் தரவுகள் மூலம் தெரியவந்த அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் மூலம் வரும் நாட்களில் ஸ்கிராப் செய்யப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் திட்டமிடவில்லை. எனினும் வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இதை தொடர்ந்து வரும் நாட்களில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகும். ஆனால் சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சம். இதில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.
அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும்'' என்றனர். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்குவதை உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தடை செய்தது.
மேலும் இத்தகைய வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கும்படியும் போக்குவரத்து துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து துறை தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அத்துடன் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.