Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்
பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை சாலையில் இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அல்லது அவர்களுடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும்.
டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை நேற்று (ஜூன் 15) இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆயுள் முடியும் நிலையில் உள்ள வாகனங்களை சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய வாகனங்களை கண்டறிவதற்காக, சிறப்பு வாகன சோதனை எதுவும் உடனடியாக மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி டெல்லி சாலைகளில் இயக்கப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். பழைய மோட்டார் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போக்குவரத்து துறை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அத்துடன் முதல் ஸ்கிராப்பிங் மையத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அங்கீகாரம் பெற்ற ஸ்கிராப்பிங் மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. எனினும் தற்போது வரை வெறும் 2,879 பழைய வாகனங்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 31ம் தேதி வரையிலான அரசின் தரவுகள் மூலம் தெரியவந்த அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் மூலம் வரும் நாட்களில் ஸ்கிராப் செய்யப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் திட்டமிடவில்லை. எனினும் வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.
இதை தொடர்ந்து வரும் நாட்களில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகும். ஆனால் சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சம். இதில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.
அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும்'' என்றனர். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்குவதை உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தடை செய்தது.
மேலும் இத்தகைய வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கும்படியும் போக்குவரத்து துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து துறை தனது இணையதளத்தில் வெளியிட்டது.
அத்துடன் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!