Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
2 போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார்களின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது சீட் பெல்ட் அணியாதவர்கள் மற்றும் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள் மீது மேற்கு டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் 10 நாள் சிறப்பு வாகன தணிக்கையை நடத்தவுள்ளனர்.
வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கார்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விட்டு இரு சக்கர வாகனங்களை இயக்க கூடாது என்றும் மேற்கு டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம். இதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
கார்களின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டியதில்லை என சிலர் நினைக்கின்றனர். மேலும் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது விதிமுறை மீறல் என்பதையும் பெரும்பாலானோர் உணர்வதில்லை. எனவே இந்த விதிமுறை மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 7-ன்படி அனைத்து வாகனங்களிலும் ரியர் வியூ மிரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இதனை மதிக்காமல், அழகிற்காக வாகனங்களில் இருந்து ரியர் வியூ மிரர்களை அகற்றி விடுகின்றனர். ரியர் வியூ மிரர்கள் இல்லை என்றால், இரு சக்கர வாகனங்கள் ஸ்டைலாக இருக்கும் என பலர் நினைக்கின்றனர்.
ஆனால் இப்படி நினைப்பது நல்ல விஷயம் கிடையாது. தனக்கு பின்னால் என்ன உள்ளது? என்பதை இரு சக்கர வாகன ஓட்டி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ரியர் வியூ மிரர்கள் இல்லாததால் சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பின்னால் பார்க்காமலேயே லேன் மாறுகின்றனர். இது உங்களுக்கும், உங்கள் பின்னால் வருபவர்களுக்கும் நல்லதல்ல.
பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் நீங்கள் திடீரென லேன் மாறினால், அந்த வாகனங்கள் உங்கள் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ரியர் வியூ மிரர் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கும் இன்னும் சிலர், தலையை திருப்பி பின்னால் வாகனங்கள் எதுவும் வருகிறதா? என பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதுவும் நல்ல செயல்முறை கிடையாது. ஏனெனில் நீங்கள் முன் பகுதியில் இருந்து பார்வையை எடுக்கும்போது விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ரியர் வியூ மிரர் இருந்தால், இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்து விடலாம். பொதுவாக மேற்கண்ட 2 விதிமுறை மீறல்களையும் காவல் துறையினர் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.
ஆனால் டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், காரில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலோ அல்லது இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
தமிழகத்தில் தற்போது எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லி போக்குவரத்து காவல் துறையை போல் தமிழகத்திலும் மேற்கண்ட 2 விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!