Just In
- 9 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 54 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மகாராஷ்டிர மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இவரது கான்வாய் கார்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
தேவேந்திர பட்னாவிஸின் கான்வாயில் பயன்படுத்தப்படும் ஒரு கார், கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதிக்கு இடையே மொத்தம் 5 முறை, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதிக வேகத்தில் சென்றுள்ளது.
இதே காலகட்டத்தில், மற்றொரு கார் 8 முறை அதிக வேகத்தில் பயணித்துள்ளது. ஆக மொத்தம் ஜனவரி 12 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை, தேவேந்திர பட்னாவிஸின் கான்வாயில் பயன்படுத்தப்படும் 2 கார்கள், ஒட்டுமொத்தமாக 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளன.
ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிமுறையை மீறியதற்காகவும் செலுத்த வேண்டிய அபராத தொகை 1,000 ரூபாய். அந்த வகையில், 13 முறைக்கு மொத்தம் 13,000 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அந்த தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.
மும்பையை சேர்ந்த ஷகீல் அகமது என்பவர் தாக்கல் செய்திருந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனு மூலமாக, தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு போக்குவரத்து போலீசார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ''விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க, மும்பையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை இந்த கேமராக்கள் கண்டறிந்து, ஆட்டோமெட்டிக்காக இ-சலான்களை ஜெனரேட் செய்து விடும்.
இதன்படி மும்பையில் உள்ள பந்த்ரா வொர்லி சீலிங்க் (Bandra Worli Sealink) பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள் 13 முறை, அதிக வேகத்தில் பயணித்ததை கண்டறிந்துள்ளன.
இதனால் சலான்கள் ஆட்டோமெட்டிக்காக ஜெனரேட் ஆகிவிட்டது. ஆனால் முதல்வரின் கான்வாய் கார்களுக்கு, பாதுகாப்பு கருதி வேக கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே சலான்களை ஜெனரேட் செய்யும் சாப்ட்வேரில் உள்ள இது போன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..