Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...
ரிக்ஸாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத மனிதருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து கொண்டுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா என்றாலே, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரிக்ஸாக்கள்தான். டாக்காவை, 'ரிக்ஸாக்களின் நகரம்' என பலரும் வர்ணிக்கின்றனர். ஆனால் மிகவும் மெதுவாக இயங்கும் ரிக்ஸாக்களால், டாக்கா சாலைகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த பிரச்னைகளை களையும் விதமாக தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி டாக்கா நகரில், இன்ஜின் மூலம் இயங்க கூடிய மற்றும் பேட்டரி மூலம் இயங்க கூடிய என பல்வேறு வகையான ரிக்ஸாக்களுக்கு தற்போது அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்சிசி (DSCC - Dhaka South City Corporation) பகுதியில் உள்ள சாலைகளில், தடை விதிக்கப்பட்ட ரிக்ஸாக்களை இயக்கும் நபர்கள் மீது தற்போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் டாக்கா சாலைகளில், ஒழுங்கை கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ரிக்ஸா ஓட்டுனர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அவர்களில் ஃபஜ்லுர் ரகுமானும் ஒருவர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஃபஜ்லுர் ரகுமான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஊரடங்கிற்கு பின் ஒரு கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். எனினும் அந்த வேலையையும் ஒரு சில காரணங்களால் அவர் இழக்க நேரிட்டது. எனவே ரிக்ஸா ஓட்டலாம் என்று ஃபஜ்லுர் ரகுமான் முடிவு செய்தார்.
இதன்பின்னர் எப்படியோ 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பேட்டரியில் இயங்க கூடிய ரிக்ஸா ஒன்றை அவர் வாங்கினார். ஆனால் புதிய விதிமுறைகளின்படி, அந்த ரிக்ஸாவை அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்து விட்டனர். இதனால் ஃபஜ்லுர் ரகுமான் மனமுடைந்து போனார். அதிகாரிகளின் நடவடிக்கையால், அவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலை தளங்களில் வெளியானது.
முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை பார்த்த பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர், ஏதேனும் ஒரு வழியிலாவது ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவி செய்வதற்கு முன்வந்து கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவுவதற்கு ஒரு நல்ல மனிதர் முன் வந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஹ்ஸன் பூயியன் என்பவர்தான் அந்ந நல்ல மனிதர். ஃபஜ்லுர் ரகுமானுக்கு ஒரு புதிய ரிக்ஸாவை பரிசாக வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஃபஜ்லுர் ரகுமானின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ள அவர், ''தேவை என்றால், நம்மால் விஷயங்களை மாற்ற முடியும். ஒரு புதிய ரிக்ஸாவை வாங்கியபின் வீட்டிற்கு சென்று கொண்டுள்ளேன்'' என கூறியுள்ளார்.
இதற்காக அஹ்ஸன் பூயியனுக்கும் சமூக வலை தளங்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் இத்தகைய காணொளிகள் வெளியாகி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து உதவி கிடைப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பல முறை நடந்துள்ளன.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!