Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தரமான அறிவிப்பு! ஃபேம்2 சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தது மத்திய அரசு...
மத்திய அரசு ஃபேம்2 சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஓராண்டு வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த திங்கள் அன்று ஃபேம்-2 திட்டத்தினை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஃபேம்-2 திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு ஃபேம்-2 திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மின் வாகன பயன்பாட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த சிறப்பு திட்டத்தையே அடுத்த ஓராண்டிற்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால், கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மானியம் பெறுவதற்கு தகுதியான நிறுவனம் என்ற சான்றை அனைத்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் 2021 நிதியாண்டிலும் தகுதியானவர்களாக மாறியுள்ளனர்.
இந்திய அரசு ஃபேம்2 திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே மானியத்தை வழங்கி வருகின்றது. உள் நாட்டு உற்பத்தி மற்றும் மின் வாகனத்தின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மானியத்தை வழங்கி வருகின்றது மத்திய அரசு.
இந்த மானியத்தை பெற வேண்டுமானால் மின் வாகனம் மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்திற்கு தகுதியானது என்ற சான்றினை பெற வேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறான சான்றை கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பெற்ற வாகன உற்பத்தியாளர்களே தொடர்ந்து மானியம் பெற தகுதியானவர்களாக மாறியிருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் சான்றை புதுப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஃபேம்-2 திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மின்சார வாகனங்களை வாங்குவோரை ஊக்குவிப்பதற்காக இந்த மொபெரும் தொகையில் இருந்தே மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மானியம் பெற தகுதியான நிறுவனங்களாக உள்ள நிறுவனங்கள் சில; ஏத்தர் எனர்ஜி, ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா ஆட்டோ டெக், ஆம்பியர், ரிவோல்ட் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகியவை ஆகும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, மானியம் பெற தகுதியானவர்கள் என்ற சான்றை பெற்றிருக்கும் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கின்றன. மின்சார வாகன பிரியர்கள் சார்பிலும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!