Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...
பிரபல சினிமா இயக்குனர் ஒருவரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், நெட்டிசன்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. இவரை சுற்றி ஏதேனும் ஒரு சர்ச்சை வலம் வந்து கொண்டேதான் இருக்கும். ராம் கோபால் வர்மாவையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. ராம் கோபால் வர்மா என்றாலே, சர்ச்சைகள்தான் ஒருவரின் நினைவிற்கு முதலில் வரும். இந்த சூழலில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் ராம் கோபால் வர்மா சிக்கி கொண்டுள்ளார்.
இது அவராகவே தேடிக்கொண்டது என்றும் கூட சொல்லலாம். ஐஸ்மார்ட் சங்கர் என்ற புதிய தெலுங்கு படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை காண்பதற்காக ஐதராபாத் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு ராம் கோபால் வர்மா சமீபத்தில் சென்றார். ஆனால் அவர் சாதாரணமாக செல்லவில்லை. ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் 'ட்ரிபிள்ஸ்' அடித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
ராம் கோபால் வர்மா மற்றும் மற்றொரு இயக்குனரான அஜய் பூபதி ஆகியோர் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கின் பின்னால் அமர்ந்து கொள்ள, மற்றொரு இயக்குனரான அகஸ்தியா ஐதராபாத்தின் பிஸியான சாலைகளில் பைக்கை ஓட்டி வந்தார். இவர்கள் மூவரும் ஒரே பைக்கில் தியேட்டரை வந்தடைந்தனர். போதாக்குறைக்கு அவர்கள் மூவருமே ஹெல்மெட் அணியவில்லை.
இரு சக்கர வாகனம் என்பது இருவர் மட்டுமே பயணிப்பதற்கானது. இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணம் செய்வது என்பது இந்தியாவை பொறுத்தவரை சட்ட விரோதம். அது மிகவும் ஆபத்தானதும் கூட. இதுதவிர இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவதும் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 2 விதிகளையும் அவர்கள் மூவரும் ஒரு சேர மீறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் மற்றொரு விசேஷம் என்னவென்றால், ராம் கோபால் வர்மாதான் இதனை வெளியிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் போலீசார் எங்கே? அவர்கள் அனைவரும் தியேட்டருக்குள் ஐஸ்மார்ட் சங்கர் படம் பார்த்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன் என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. ராம் கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வைக்க அரசு மிக தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்களை சேர்ந்த நபர்கள், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகன ஓட்டிகளுக்கு நல்லதொரு முன் உதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நல்ல முன் உதாரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பரவாயில்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற தவறான முன் உதாரணங்களையாவது ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
இந்த சூழலில் ராம் கோபால் வர்மா வெளியிட்ட வீடியோவும், அவரது கருத்தும் போலீசாரை சென்றடைந்தது. உடனடியாக சைபராபாத் போக்குவரத்து போலீசார் இந்த சம்பவத்திற்காக 1,335 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த தகவலை தங்கள் டிவிட்டர் பக்கத்திலும் சைபராபாத் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
திலீப் குமார் என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது பெயரில்தான் சம்பந்தப்பட்ட வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் யார்? என்பது சரியாக தெரியவில்லை. அதேபோல் போலீசார் விதித்துள்ள அபராதத்தை யார் செலுத்த போகிறார்கள்? என்பதும் தெரியவில்லை.
பெரும்பாலும் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு பதிலாக வாகன உரிமையாளர்களுக்குதான் இ-சலான்கள் வழங்கப்படுகின்றன. எனவே நீங்கள் வாகனத்தை விற்பனை செய்தால், உடனடியாக பதிவு சான்றிதழில் பெயரை மாற்றி விடுவது நல்லது. நீங்கள் பெயரை மாற்றாவிட்டால், வேறு யாரேனும் உங்கள் வாகனத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டாலும் கூட, உங்கள் பெயருக்குதான் இ-சலான்கள் வந்து கொண்டிருக்கும். பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றாததன் காரணமாக வாகனத்தின் முந்தைய உரிமையாளருக்கு இ-சலான்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி