Just In
- 1 hr ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 2 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 4 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 9 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- News தப்பி தவறி கூட.. இந்த டைம்ல வெளியே போகாதீங்க.. தமிழ்நாட்டிலும் வெப்ப அலை.. முக்கிய அறிவுரை!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில், ஹெல்மெட் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இதன்காரணமாகவே, இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இருசக்கர வாகன விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் செல்வதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஆகையால், இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவினை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், இதனை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை. ஆகையால், இதுபோன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, அரசு திட்டம் வகுத்து வருகின்றது.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்க வேண்டாம் என மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷ், அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மாறாக, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, சிசிடிவி கேமிரா மூலம் கண்டறிந்து அவர்களுக்கு இ-செலாண் மூலம் அபராதத் தொகையை அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, மக்களை சாலையில் நிக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. மாறாக அவர்களைத் தண்டிக்க, போக்குவரத்து போலீஸார் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த வேண்டும்" என்றார்.
அண்மையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷை சந்தித்த புனே நகரத்தின் தொகுதி எம்எல்ஏ, கூறியதன் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, அவர்கள் (எம்எல்ஏ), "போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீஸார், ஹெல்மெட் அணிந்து வருபவர்கள், அணியாமல் வருபவர்கள் என இரு தரப்பு வாகன ஓட்டிகளையும் சாலையில் மடக்கி வைத்து நீண்ட நேரம் அலை கழித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், பணிக்கு செல்வோரின் நேரம் விரையமாவதுடன், அவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்" என தெரிவித்திருந்தனர்.
இதன்காரணமாக, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் பகுதியில் கடைப்பிடிப்பதைப் போன்றே, புனேவிலும், சிசிடிவி கேமிராக்களைப் பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த புதிய உத்தரவினால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு விலக்களிக்கப்பட்டு என்ற எண்ணிக்கொள்ள தேவையில்லை என்றும், கட்டாயம் மாநிலத்தில் ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், சிசிடிவி மூலம் அதிரடி வேட்டையைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சமீபத்தில்கூட, வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்மூலம், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிக்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகை, பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 500 அபராதம், தற்போது ரூ. 5 ஆயிரமாக மாற்றப்பட உள்ளது. இதேபோன்று, மது அருந்திவிட்டு பைக்கை இயக்கிவந்தால் ரூ. 2 ஆயிரத்திற்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு, புதிய விதியின்மூலம் உயர இருக்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள் தற்போது கலக்கத்தில் உரைய ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், சாலையில் தினமும் அரங்கேறும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.