Just In
- 6 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அதிரடியான உத்தரவு ஒன்று தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் காவல் துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், ஆவண சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துவதும் ஒன்றாகும். டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதாக கூறி வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டை நடத்துவதை கண் கூடாகவே காண முடிகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாது, தேவையில்லாமல் கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களால் சரியான நேரத்தில் சென்று சேர முடிவதில்லை. இதன் காரணமாக இறுதியில் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது கண்ணால் காண கூடிய வகையிலான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரையில், வாகனங்களை நிறுத்த கூடாது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம். ஆனால் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளை துன்புறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்தது கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் ஆவார்.
இந்த சூழலில் அதே உத்தரவை தற்போது கோவா டிஜிபி ஜஸ்பால் சிங்கும் பிறப்பித்துள்ளார். கோவா மாநிலத்தில் உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் ஆவண சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இதையடுத்துதான் கோவா டிஜிபி ஜஸ்பால் சிங் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், காவல் துறையினர் அவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் அவர்களை நிறுத்தி நேரத்தை வீணடிக்க கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்த உத்தரவு நன்மை அளிக்கும் என டிஜிபி ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டிஜிபி ஜஸ்பால் சிங், ''கோவாவிற்கு சுற்றுலா வருபவர்கள் சுகமான நினைவுகளுடன் திரும்ப வேண்டும்'' என்றார். இந்த பிரச்னை கோவா மாநில சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்ட நிலையில்தான், டிஜிபி ஜஸ்பால் சிங் காவல் துறையினருக்கு தற்போது அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கோவா மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் துன்புறுத்த கூடாது. இது தொடர்பான உத்தரவுகளை காவல் துறையினருக்கு பிறப்பிக்க வேண்டும் என முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்துதான் டிஜிபி ஜஸ்பால் சிங்கிடம் இருந்து தற்போது இந்த உத்தரவு வந்துள்ளது.
ஆவண சோதனை என்ற பெயரில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதை காவல் துறை உயர் அதிகாரிகளும் ஒப்பு கொண்டுள்ளனர். இந்த சூழலில் வெளிவந்துள்ள இந்த உத்தரவு கோவா மக்களுக்கும், கோவாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினர் பிரச்னைகளை தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும். பிரச்னைகளை உருவாக்குபவர்களாக இருக்க கூடாது என காவல் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்ற உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் இங்குள்ள வாகன ஓட்டிகள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக காவல் துறை உயரதிகாரிகள் இதுபற்றி பரிசீலனை செய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!