Just In
- 46 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 46 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!
கேரளாவில், கல்லூரி மாணவிகளை பஸ் ஓட்டுனர் ஒருவர் கியர் மாற்றுவதற்கு அனுமதித்து குதூகலித்த வீடியோ வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவையும், அதன் பின் நடந்த விஷயங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
பொது போக்குவரத்து சாதனைங்களை இயக்குவோருக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஆனால், பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வரும் பஸ் ஓட்டுனர்களின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் பல அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவது வாடிக்கையாவிட்டது.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க பஸ் ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பஸ் ஓட்டுனர் ஒருவர் கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்து குதூகலிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலிருந்து அந்த பஸ் கோவாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளது. அதில், ஏராளமான கல்லூரி மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது மாணவிகள் சிலரை கியர் மாற்றுவதற்கு அவர் அனுமதித்து இருப்பதையும், அதனை மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது.
போக்குவரத்து நிலைக்கு ஏற்ப பஸ்சின் வேகத்தை வைத்து அவர் கியரை குறைக்கவும், கூட்டுவதற்கும் கூறுவதும், அதற்கு ஏற்ப இரண்டு மாணவிகள் கியர் லிவரை முன் பின் நகர்த்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. மாணவிகளை கியர் மாற்றுவதற்கு அனுமதித்த ஓட்டுனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதை கூட அறியாமல் கியர் மாற்ற அனுமதித்திருப்பது ஓட்டுனரின் அறியாமையை காட்டுவதாக இருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அந்த பஸ்சை இயக்கியது வயநாடு பகுதியை சேர்ந்த ஷாஜி என்பது தெரிய வந்தது. மேலும், அவருக்கு ஆர்டிஓ அதிகாரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.
இதையடுத்து, அவரிடம் அவர் விசாரணை நடத்தினார். இதில், மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்தை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. விசாரணை முடிவில், ஓட்டுனர் ஷாஜியின் ஓட்டுனர் உரிமத்தை கல்பெட்டா வட்டார ஆர்டிஓ அதிகாரி ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டுனர் மட்டுமே இயக்குவது உசிதம். ஓட்டுனர் இல்லாமல் அருகில் இருப்பவர்களை கியர் மாற்றுவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதிக்கும்போது வாகனம் எந்த நேரத்திலும் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு வினையாகிவிடும். போன் பேசிக்கொண்டே பக்கத்தில் இருப்பவர்களை ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை கொடுப்பதும் பலரின் வழக்கமாகி இருக்கிறது.
நொடியில் எல்லாம் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டு சாலையில் முழு கவனத்தையும் ஓட்டுனர்கள் செலுத்துவதுடன், வாகனத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் தங்கள் கையில் வைத்திருப்பது அவசியம்.
போக்குவரத்து விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கை குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!