Just In
- 4 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போச்சு... காரை இனி ரிவர்ஸிலும் எட்டு போட்டு காட்டனுமாம்...!! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் கிடைக்காது!
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு கடுமையாக்கப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் வெறும் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால் சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 10 சதவீதமாக உள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
மேலும், உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களை காட்டிலும் கடந்த ஆண்டில் சாலை விபத்தினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என மற்றொரு புள்ளி விபரம் வேறு நம்மை பயமுறுத்துகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்குமென்று சற்று சிந்தித்து பார்த்தால், மது உள்ளிட்ட போதை பொருட்கள் தான் நமது நினைவிற்கு வரும். ஆம் போதை பொருட்களினால் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன என்பது உண்மை தான்.
அதேநேரம் வேறு சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களால் அவர்களுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் செல்வோருக்கும் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன.
ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களிலும் பலரும், இந்த கையில் காசை கொடுத்து அந்த கையில் ஓட்டுநர் உரிமத்தை வாங்கியவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதேநேரம், தற்போது இருக்கும் தகுதி தேர்வு முறை ஈஸியாக இருப்பதால் எளிதில் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படுகிறது என்ற புகாரும் பரவலாக உள்ளது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வை கடுமையாக்க மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
இதில், ஓட்டுநர் உரிமம் பெற விழைபவர்களுக்கு இனி கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். வாகனத்தை பின்னாலிருந்து (ரிவர்ஸ்) இயக்குவது கூட மிக துல்லியமாக இருக்க வேண்டும். அதேபோல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதிப்பெண் 69 சதவீதத்தை தாண்ட வேண்டும்.
அப்போது தான் வாகன ஓட்டிகள் உரிமம் பெற முடியும். வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தை பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புவது என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!