Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உஷார் மக்களே!! ஹெல்மெட் இல்லனா லைசன்ஸ் சஸ்பென்ட்- எங்கு தெரியுமா இந்த சட்டம்?
பயணத்தின்போது ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு வழிவகுக்கும் சட்டம் மிக விரைவில் ஒடிசா மாநிலத்தில் கொண்டுவரப்படவுள்ளது. கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாகனத்தில் எத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் இருந்தாலும் ஹெல்மெட் தான் முக்கிய பாதுகாப்பு அரணாகும். பெரிய பெரிய விபத்துகள் பெரும்பாலானவை ஹெல்மெட்டினால் ஒன்றும் இல்லாமல் போய் உள்ளன.
இதனால் தான் அரசாங்கங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலே போய் ஒடிசா மாநில அரசு, ஹெலெம்ட் அணியவில்லை என்றால் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான சட்டத்தை கொண்டுவர முனைப்பு காட்டி வருகிறது.
இதன் முதல் பகுதியாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி இந்த சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று ஒடிசா அரசு மாநில காவல்துறை மற்றும் போக்குவரத்து ஆணையரை வலியுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.எஸ்.பதி டி.ஜி.பி மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதி, மாநிலத்தில் ஹெல்மெட் இல்லாத பைக்கர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதத்தின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலும் ஹெல்மெட் சட்டத்தை மீறியதற்காக ஓட்டுனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை மாவட்ட வாரியாக ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒடிசாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 11,064 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 4,688 விபத்துகளில் இருசக்கர வாகனங்களும் அடங்குகின்றன. இந்த விபத்துகளில் மொத்தம் 5.333 பேர் கடந்த ஆண்டில் இறந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களை உள்ளடக்கிய விபத்துகளில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,156 பேர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. ஹெல்மெட் கட்டாயமாக இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 194டி-இன்படி, யார் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டுகிறாரோ அல்லது தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதிக்கிறாரோ அவர் சட்டத்தின் 129 வது பிரிவின் விதிகளின்கீழ் ரூ .1,000 அபராதத்துடன் தண்டிக்கப்படுவதுடன் மூன்று மாத காலத்திற்கு அவர் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதற்கே தகுதியற்றவர் என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!