Just In
- 20 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 55 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு
கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன.
விலையுயர்ந்த கார்கள் என்றால் அதில் ஒரு பிரத்யேக தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தீர்க்கமாக இருப்பதையும் காணலாம். அதுபோன்று துபாய் சாலைகளில் தினசரி காணக்கிடைக்கும் கார்கள் மற்றும் சாலைகளையும் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பாக இது அமைகிறது.
தரமான தங்கம்
தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு உலகிலேயே சிறந்த நகரமாக துபாய் விளங்குகிறது. தரமான தங்க ஆபரணங்கள் வாங்குவதற்காக பலர் துபாய் செல்கின்றனர். அவ்வாறு தங்கத்திற்கு பெயர் போன ஊரில் ஒரு காரையே தங்கத்தால் இழைத்து ஜொலிக்க விட்டுள்ளனர்.
தங்க பென்ஸ்
காரின் வண்ணத்தை மாற்றுவதற்கும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் யோசிக்கும் வேளையில், தங்க முலாம் பூசப்பட்ட பென்ஸ் காரை ஆர்டர் செய்து வாங்கி அசரடிக்கின்றனர் துபாய் வாசிகள். இந்த பென்ஸ் கார் 24 காரட் தங்கத்தில் முலாம் பூசியுள்ளனர். மேலும், 156 சிறிய வைரக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 1.53 லட்சம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலர் ஓகேவா?
வெள்ளை, சில்வர் வண்ணங்கள்தான் நமக்கு ஃபேவரிட். இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 29 சதவீதம் வெள்ளை நிறம் என்றும், 24 சதவீதம் சில்வர் நிறம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிற வண்ணங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தியர்கள் விரும்புவதில்லை. சிலர் மட்டுமே பிரத்யேக வண்ணங்களை தேர்வு செய்து வாங்குவது வழக்கம். ஆனால், அங்கு ஒருவரின் காரின் வண்ணத்தை பாருங்கள்.
ஜிலு ஜிலு சிவப்பு
தனித்துவமாக தெரியும் விதத்தில் ஜிகினா தூவப்பட்டதுபோல் சிவப்பு நிறத்தில் பளபளக்கும் காரை பார்க்கலாம். அங்குள்ள அமெரிக்கன் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரினுடையதாம் இந்த கார்.
ஆல்ட்டோ ஆதிக்கம்
நம்மூர் பார்க்கிங் வளாகங்களில் ஆல்ட்டோவும், சான்ட்ரோவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அங்கு ஃபெராரியும், அஸ்டன் மார்ட்டினின் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அணிவகுப்பு
துபாயை சேர்ந்த ஷேக் ஒருவர் தனது கார்களை அணிவகுக்க விட்டபோது எடுத்த படம். இங்கு பல கார் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இது சாத்தியம்.
புது வண்ண புகாட்டி
ஒரு நகரத்தில் ஒன்றிரண்டு புகாட்டி இருந்தால் பரவாயில்லை. எண்ணிக்கையில் அதிகம் இருக்கும்போது இது என்னுடையது என்று தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பெயிண்ட்டை மாற்றிவிடுகின்றனர். அது புகாட்டியாக இருந்தாலும், அதில் தங்களது தனித்துவத்தை பிரதிபலிக்கச் செய்கின்றனர்.
தங்க நிறம்
புகாட்டி காரை தங்க நிறத்தில் மாற்றியிருப்பதை காணலாம்.
செல்லப் பிராணி
நாய்க்குட்டிகளை செல்லப் பிராணியாக கார்களில் அழைத்துச் செல்வது சகஜம். ஆனால், அங்கு பாருங்கள் சிறுத்தையை சாவகாசமாக பக்கத்து சீட்டில் உட்கார வைத்து அழைத்துச் செல்கிறார் தில் ஷேக். இது பரவாயில்லை அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.
சிங்கம்லே...
இவர் கார் மீது சிங்கத்தை வைத்து விளையாடி வருகிறார். விலையுயர்ந்த கார்களும், சிங்கமும் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப் போனதை காணலாம்.
புலியும் விலக்கல்ல...
உலகிலேயே இந்த மாதிரி காட்சிகளை துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் மட்டும்தான் அதிகம் காண முடியும் என்று கூறலாம். புலிக்குட்டியை வேடிக்கை பார்க்கவிட்டு பிறருக்கு வேடிக்கை காட்டும் ஒரு துபாய் வாசி.
கைவிடப்பட்ட ஃபெராரி
அம்பாசடரும், பத்மினியும் இங்கு கைவிடப்பட்ட நிலையில் காண முடியும். அங்கு லம்போர்கினி காரை சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளதை காணலாம். துபாய் போலீசாருக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் விஷயமாக இது மாறியிருக்கிறது. ஏனெனில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களது கார்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிடுகின்றனராம்.
பிஎம்டபிள்யூ இசட்3
பழைய பிஎம்டபிள்யூ இசட்3 கார் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதை காணலாம். இது போன்ற கார்களை எடுத்துச் சென்று கார் ஜெயில் எனப்படும் பட்டியில் அடைத்துவைக்கின்றனர். கார் காணாமல் போனால், கார் ஜெயிலுக்கு சென்று பார்த்தால் அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கும்.
கார் சேகரிப்பு
உலகின் அதிக கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்களை கணக்கில் எடுத்தால் அதில் துபாய் உள்ளிட்ட அமீரக நாடுகளின் ஷேக்குகள்தான் முன்னிலை வக்கின்றனர். 10 அல்லது 15 என்று நினைக்க வேண்டாம். நூற்றுக் கணக்கில் வைத்திருப்பதோடு, அதனை சிறப்பாக பராமரிக்கவும் செய்கின்றனர்.
போலீஸ் கார்கள்
மஹிந்திரா ஜீப்பிலிருந்து மெதுவாக ஹூண்டாய் ஆக்சென்ட் காருக்கு மாறினர். ஆனால், துபாய் போலீசார் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த கார்களின் பட்டியலை பார்த்து வளர்ந்த நாடுகளையே வாய் பிளக்க வைத்தது. உலகில் இருக்கும் விலையுயர்ந்த கார்களை பட்டியல்போட்டு, அத்தனையும் குறுகிய காலத்தில் வாங்கி சேர்த்துவிட்டனர் துபாய் போலீசார்.
காஸ்ட்லி கார்கள்
துபாய் போலீசாரிடம் லம்போர்கினி, புகாட்டி வேரான், ஃபெராரி, அஸ்டன் மார்ட்டின், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ என உலகின் அனைத்து விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் ரோந்துப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கார்கள் மட்டுமல்ல, ஆம்புலன்ஸ் மற்றும் கடற்கரை ரோந்துக்காக விலையுயர்ந்த ஏடிவி வாகனம் மற்றும் படகுகளும் உள்ளன.
சூப்பர் கார் டாக்சி
அம்பாசடர் டாக்சியை பார்த்து அலுத்துப் போய் இப்போது சற்று பிரிமியம் கார்களை டாக்சியாகவும், சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டும் வசதிகளும் இப்போது கிடைக்கிறது. இந்த நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஆட்டோ ஷோவை பிரபலப்படுத்தும் நோக்கில் சூப்பர் கார்களை டாக்சியாக அறிமுகம் செய்துள்ளனர். அதுவும் இலவசமாக அந்த டாக்சியில் ரவுண்ட் போவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாலைகள்
இருக்கிற மரங்களை வெட்டி சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கிறோம். பாலைவன பூமி என்ற சுவடே தெரியாத அளவுக்கு அங்கு சாலையோரங்களில் பூங்காக்களை அமைத்து பசுமையாக வைத்து பராமரிக்கின்றனர்.
கார் நிறுவனங்களின் ஆர்வம்
உலகின் எந்த நாட்டை சேர்ந்த விலையுயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், அது துபாய் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வடிவமைப்பு, வசதிகளில் முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தங்களது பிராண்டு மதிப்பை உயர்த்தும் விதமாக துபாய் மற்றும் அரபு நாடுகளில் பல பிரத்யேக அமைப்பிலான கட்டடங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.
ஃபெராரி வேர்ல்டு
அபுதாயில் உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை ஃபெராரி கார் நிறுவனம் அமைத்துள்ளது. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பக்கத்தில் இருக்கும் ஒரு படம் போதாதா என்ன?.
ரோல்ஸ்ராய்ஸ் அலுவலகம்
ஃபெராரி போன்றே அபுதாபியில் "பெளர்ணமியன்று பால் வண்ண நிலவுக்கு பதில் தங்க கீற்றுகளுடன் கருப்பு நிலா அடிவானில் இருந்து கிளம்பும்போது எப்படியிருக்கும்," என்ற கற்பனையை தூண்டுகிறது இரவு நேர விளக்கொளியில் மின்னும் ரோல்ஸ்ராய்ஸ் அபுதாபி தலைமையக கட்டிடம்..!!
முற்றும்.
வாடிக்கையான நிகழ்வு
துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில்தான் அதிகளவில் கார்கள் அனாதையாக விடப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் அனாதையாக கைவிடப்படும் கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டதாம்.
எக்கச்சக்க கார்கள்...
ஆண்டுக்கு 3,000 சொகுசு கார்கள் வரை சாலைகளில் அனாதையாக விடப்படுகிறதாம். இந்த பிரச்னை துபாய் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெராரியும், போர்ஷேவும்...
பிஎம்டபிள்யூ, பென்ஸ் மாத்திரமல்ல, போர்ஷே, ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் போன்ற பெரும் பணக்கார கார்கள் பல சாலைகளில் உரிமையாளர்களால் அனாதையாக விட்டுச் செல்லப்படுகிறது.
மில்லியன் டாலர் கார்
துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் வளாகத்தில் ஒரு மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபெராரி என்ஸோ கார் கூட அனாதையாக விடப்பட்டு கேட்பாரற்று கிடந்துள்ளது.
காரணம்...
துபாயில் பின்பற்றப்படும் கடுமையான ஷரியா சட்டம்தான் கார்கள் இவ்வாறு அனாதையாக்கப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது. ஷரியா சட்டத்திற்கும், கார் அனாதையாக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. அடுத்த ஸ்லைடில் காணலாம்.
ஜெயில் தண்டனை
சொகுசு கார்களை வாங்கும் பலரால் அதற்கான கடனை சரியாக திருப்பி செலுத்த இயலுவதில்லை. ஷரியா சட்டத்தின்படி, கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு சிறை தண்டனை உண்டு. நம்ம ஊர் போன்று கோர்ட்டில் போட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது.
ஓட்டம்
சொகுசு கார்களை ஆசையாக வாங்கும் சிலரால் அந்த கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும்போது, சிறை தண்டனைக்கு பயந்து அந்த நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிடுகின்றனராம். இதில், துபாய் வாசிகள் மட்டுமில்லை. அதிக அளவில் வெளிநாட்டுக்காரர்களும் கார் கடனுக்காக ஜெயிலுக்கு போக பயந்து நாட்டை விட்டு எஸ்கேப் ஆகின்றனர். அவ்வாறு எஸ்கேப் ஆகும்போதுதான், விமான நிலையம் அருகில் கார்களை நிறுத்திவிட்டு மாயமாகிவிடுகின்றனர்.
போலீஸ் நோட்டீஸ்
அனாதையாக கிடக்கும் கார் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தால் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் திரும்ப வந்து காரை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காருக்கு ஜெயில்...
கார் ஜெயில்
சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களுக்குள் காரை பெற்றுக் கொள்ளாவிட்டால், நம்மூரில் இருக்கும் ஆடுகளுக்கு பட்டி இருப்பது போன்று, கார்களுக்கான ஜெயில் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கொண்டுபோய் காரை நிறுத்திவிடுவர். கார் ஜெயிலுக்கு வந்து காரை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் வெகு சொற்பமாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலம்
கார் ஜெயிலில் இருக்கும் கார்களை குறிப்பிட்ட காலம் வரை உரிமையாளர் பெறவில்லை எனில், ஏலம் விடப்பட்டுவிடும். அப்படி ஏலம் விடப்படும்போது, சில சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு கூட ஏலம் போகுமாம்.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!