Just In
- 28 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?
வீட்டின் கதவுடன் ஆடி காரை இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துக்கள் உலகம் முழுக்க கவனம் பெற்று விடுகின்றன.
இன்னும் சில விபத்துக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, வித்தியாசமான காரணங்களுக்காக உலக மக்களின் கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள ஒரு விபத்து, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக வலை தளங்களில், இந்த விபத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இளம் வயது ஓட்டுனர் ஒருவர், ஆடி நிறுவனத்தின் கார் ஒன்றை, ஒரு வீட்டின் முன் பகுதியில் மோதியுள்ளார். அப்போது அந்த வீட்டின் கதவு எப்படியோ காரின் மேலே சிக்கி கொண்டது. ஆனால் அந்த காரின் ஓட்டுனர், அதை பொருட்படுத்தாமல் காரை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். வீட்டின் கதவு காரில் சிக்கியிருந்த நிலையில், பல மீட்டர் தூரத்திற்கு அவர் காரை அப்படியே ஓட்டி சென்றுள்ளார்.
ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீட்டியோர் 350 பைக்கில் உள்ளதா? வீடியோ!
18 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர்தான் இந்த காரியத்தை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. வீட்டின் மீது மோதுவதற்கு முன்பாக, மற்றொரு வாகனத்தின் மீதும் அந்த ஆடி கார் மோதியுள்ளது. மேற்கு யார்க்ஸையரில் உள்ள ட்யூஸ்பரி என்னும் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்ற சமயத்தில் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஆடி காரின் ஓட்டுனரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் பெரிய அளவில் காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு யார்க்ஸையர் காவல் துறையின் சாலைகளை கண்காணிக்கும் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் பிரிவு இந்த விபத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேல்பகுதியில் கதவு சிக்கியிருக்கும் நிலையில் கார் நின்று கொண்டிருக்குமாறு உள்ள அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விபத்து ஆபத்தானது என்னும் நிலையிலும், சமூக வலை தளங்களில் ஒரு சிலர் இந்த சம்பவத்தை வேடிக்கையாக பேசி வருகின்றனர். நாம் ஏற்கனவே கூறியபடி, ஓட்டுனர் குடிபோதையில் இருந்த காரணத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் மற்றும் முடிவு எடுக்கும் திறனை இழந்து விடுவதால், அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. அத்துடன் விபத்து நடந்தவுடன் வாகன ஓட்டிகள் நிற்காமல், இதுபோல் ஏடாகூடமாகவும் சில காரியங்களை செய்து விடுகின்றனர். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் உடையவர்கள், இன்றே அதனை நிறுத்தி கொள்வது நல்லது.
Image Courtesy: WYP Roads Policing Unit
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!